நீங்கள்

சத்தமிடும் நட்சத்திரங்கள்

Wednesday 25 May 2011
               
                      குர்ஆன் பொய்யென நிறுவ உலகில் இன்னும் பலர் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர்.ஆனால் குர்ஆன் காலம் செல்ல செல்ல உண்மையாக்கப்பட்டுக் கொண்டே போகின்றது. குர்ஆனில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அல்லாஹ்வில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இதோ இந்த பாரிய விஞ்ஞான உண்மைய பார்த்து உங்கள் சந்தேகத்த தீர்த்து ஈமானை உறுதி செய்து கொள்ளுங்கள்.
 
 

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்


                           அன்பு சகோதர/சகோதரிகளுக்கு,


                 உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக...ஆமீன்.


இந்த கடிதத்தை படிக்க சில நிமிடங்கள் செலவிடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கான தேடல் புதிய திசையை நோக்கி பயணப்படலாம். திறந்த மனதோடு சிந்திக்கக்கூடிய, பாரபட்சம் காட்டாத உண்மையை அறிய விரும்பும் சகோதரர்/சகோதரி நீங்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். மேலும் தொடர்வதற்கு முன்னால், இந்த கடிதத்தின் நோக்கம் என்னவென்று சொல்ல விரும்புகின்றோம். இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறி குறித்த சுருக்கமான அறிமுகமே இந்த கடிதம்.


இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்றால் இறைவனுக்கு முற்றிலுமாக அடிபணிவது/அர்ப்பணிப்பது என்று அர்த்தம். எவர் ஒருவர் அப்படி செய்கின்றாரோ அவர் முஸ்லிம் என அழைக்கப்படுகின்றார். உலகின் முதல் மனிதரான ஆதம் (அலை) தொடங்கி, மூசா (Moses) (அலை), ஈசா (Jesus) (அலை), முஹம்மது (ஸல்) என்று இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களுக்கும் கொடுக்கப்பட்டதும், அவர்களால் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதும் இஸ்லாம் தான்.

இஸ்லாம் கூறும் செய்தி:

இஸ்லாம் கூறும் செய்தி மிக எளிமையானது. இறைவன் ஒருவனே, அவனுக்கு இணை யாருமில்லை, அவனை மட்டுமே வழிபடுங்கள் என்பது தான் அது.


    நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் தேவையற்றவன். அவன் பெறவுமில்லை, பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவருமில்லை --- குரான் (112:1-4)

இந்த பிரபஞ்சத்தை, அதனுள் உள்ள நம்மை என்று அனைத்தையும் படைத்த இறைவனை மட்டுமே வழிபடுமாறும், அவனால் படைக்கப்பட்ட சக உயிரினங்களையோ அல்லது உயிரற்றவையையோ வழிபடுவதை விட்டொழிக்குமாறும் அறிவுறுத்துகின்றது இஸ்லாம்.

படைத்தவனை மட்டுமே வணங்குங்கள், அவனால் படைக்கப்பட்டவையை வணங்காதீர்கள் என்பது தான் இஸ்லாம் உலக மக்களுக்கு கூறும் செய்தி.

குர் ஆன்:

இறைவனால் அனுப்பப்பட்ட ஒவ்வொரு தூதரும் அற்புதங்களோடு அனுப்பப்பட்டார்கள். இறுதித் தூதரான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புதம் குரான்.

குரான் இருபத்தி மூன்று ஆண்டு கால இடைவெளியில் சிறுகச் சிறுக இறைவனால் இறுதித் தூதருக்கு அருளப்பட்டது.

எப்படிப்பட்ட வேதம் குர்ஆன்?

    இன்னும், நம் அடியாருக்கு அருளியுள்ளதில் நீங்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பீர்களானால், உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால், அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்துக்கொண்டு இது போன்ற ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் --- குர்ஆன் (2:23).

இது மனித குலத்திற்கு இறைவனால் விடப்பட்ட சவால். அன்றிலிருந்து இன்று வரை இந்த சவாலுக்கு நெருக்கத்தில் கூட யாராலும் வரமுடியவில்லை. அதன் விளைவாக, இது மனித எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட வேதமென்று கோடானு கோடி மக்கள் தொடர்ந்து நம்பி வருகின்றார்கள்.

இந்த வேதம் அன்று இருந்த சிந்தனையாளர்களுக்கும் சரி, இன்று இருக்க கூடிய சிந்தனையாளர்களுக்கும் சரி தொடர்ந்து ஆச்சர்யத்தை தந்து வருகின்றது.

மருத்துவ துறையில் மதிப்புமிக்க இடத்தை பெற்றுள்ள டாக்டர் கீத்மூர் (Dr.Keith Moore), தன்னுடைய "The Developing Human" புத்தகத்தில் குரானின் அறிவியல் உண்மைகள் குறித்து ஒரு பகுதியை ஒதுக்கி இருக்கின்றார்.

பிரான்சின் மதிப்புமிக்க மருத்துவரான டாக்டர் மவ்ரீஸ் புகேய்ல் (Dr.Maurice Bucaille) அவர்கள் தன்னுடைய "The Bible, the Qur'an and Science" புத்தகத்தில்,

    "ஒரு பிழையை கூட குர்ஆனில் நான் காணவில்லை. இந்த புத்தகம் ஒரு மனிதனால் எழுதப்பட்டிருந்தால், எப்படி நவீன அறிவியல் கண்டுபிடித்திருக்க கூடிய உண்மைகளை அன்றே சொல்லி இருக்க முடியும்?"

அறிஞர்கள் மட்டுமல்லாது, பெரும்பாலான மற்ற முஸ்லிம்கள் கூட, குர்ஆனில் குறிப்பிடத்தக்க ஞானம் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களது குரான் அறிவை கண்டு நீங்கள் ஆச்சர்யப்பட்டிருக்கலாம். இதற்கெல்லாம் காரணம், குரான் உங்களது நேரத்தை அதிகமாக எடுத்து கொள்ளாது என்பதே ஆகும். சில நாட்களிலேயே கூட உங்களால் முழு குரானையும் படித்து விட முடியும்.

மேலும், குரான் என்னும் இறைவேதம், உலக மக்கள் அனைவருக்குமானது. நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்டவர்கள்.  
(நபியே) உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ஓர் அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை - குரான் 21:107.

நம் அனைவருக்கும் சொந்தமான, படிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளாத குரானை ஏன் ஒரே ஒரு முறை படித்து பார்க்க நீங்கள் முன்வரக்கூடாது?  

தன்னை படிப்பவர்களை உரையாடலுக்கு உட்படுத்தி அவர்களுடன் ஒரு அறிவார்ந்த விவாதத்தை ஏற்படுத்தும் குரான் என்னும் அற்புதத்தின் தமிழ் அர்த்தங்களை படிக்க விரும்பும் சகோதர/சகோதரிகள் என்னுடைய மெயில் ஐ.டிக்கு (aashiq.ahamed.14@gmail.com) ஒரு மெயில் அனுப்புங்கள். இறைவன் நாடினால், அனுப்பி வைக்கின்றேன்.

சகோதரத்துவம்:

ஆதாம், ஏவாள் (இருவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவுவதாக) ஆகிய இருவரிலிருந்தே நாம் அனைவரும் வந்ததால் இவ்வுலகில் உள்ள அனைவருமே சகோதர/சகோதரிகள் என்று கூறுகின்றது இஸ்லாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி கூறிய விசயங்களில் சகோதரத்துவமும் ஒன்று. தன்னுடைய இறுதி பேருரையில் பின்வருமாறு தெரிவிக்கின்றார்கள் இறுதி தூதர் (ஸல்) அவர்கள்,

    "எல்லா மனிதர்களும் ஆதாம், ஏவாள்லிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல"

இஸ்லாமை பொறுத்தவரை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று யாருமில்லை. எவர் ஒருவர் இறைநம்பிக்கை கொண்டு நல்ல செயல்களை செய்கின்றாரோ அவரே இறைவனிடத்தில் உயர்ந்தவர். பிறப்பாலோ அல்லது செய்யும் தொழிலாலோ ஒருவர் உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ ஆக முடியாது.

    "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" --- குரான் 49:13

புரட்சி:

நாம் பல புரட்சிகளை பற்றி கேள்விபட்டிருக்கலாம். ஆனால், அவையெல்லாம் விட இஸ்லாம் செய்த புரட்சி மகத்தானது. மற்ற புரட்சிகளில் மக்களின் புறம் சார்ந்த சூழ்நிலைகள் மாறியிருக்கலாம். ஆனால் இஸ்லாமிய புரட்சியில் மக்களின் அகம், புறம் என இரண்டுமே மாற்றம் கண்டன. அவர்கள் உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடையிலிருந்து, மற்றவரை அணுகும் முறையிலிருந்து, சகோதரத்துவத்தின் அருமையை உணர்ந்து கொண்டதிலிருந்து என்று மாபெரும் எழுச்சியை இருபத்தி மூன்றே ஆண்டுகளில் செய்து காட்டினார் இறைத் தூதர் (ஸல்) அவர்கள்.

நல்ல விஷயங்களை நோக்கி பயணிக்க ஆசைப்படும் தங்களுக்குள்ளும் (இறைவன் நாடினால்) அந்த புரட்சி ஏற்படலாம். அதற்கு தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு முறை குரானை திறந்த மனதோடு முழுமையாக படிக்க முன்வருவது தான். ஆம், குரானுடன் நீங்கள் புரியப்போகும் விவாதம் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம், உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டலாம்.

உங்களுடைய நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. விரைவில் உண்மையை கண்டறிய இறைவன் உங்களுக்கு உதவுவானாக...ஆமீன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள்வானாக...ஆமீன்..






                                                                                                 --- நன்றி ஆஷிக் அஹ்மத் அ  





Dear Brother/Sister,

              We kindly request you to spend a few moments of your time reading this letter because it just might be possible that this letter will open before you a new dimension of your role as a human being in this universe. We hope that you are a free thinking, broadminded, and prejudice-free human being whose goal is to find the truth. Before we continue, let us state to you the purpose of this letter- that this is an introduction and invitation to the way of life known as Islam.

1. WHAT IS ISLAM

Islam, unlike most other religions, is not named after any man. Instead Islam means the submission of one's will to the only true god worthy of worship "Allah" and anyone who does so is termed a "Muslim". The word also implies "peace" which is the natural consequence of total submission to the will of Allah. Islam is the religion that was given to Adam, the first man and the first prophet of Allah, and it was the religion of all the prophets sent by Allah to mankind like Jesus and Moses.

2. THE MESSAGE OF ISLAM

The most important message of Islam is the absolute Unity of God-that there is only One Supreme Being who has no partners and is not dependent on anyone or anything. He is the creator of everything and the whole universe is under His control. Since the total submission of one's will to Allah represents the essence of worship, Islam is the worship of Allah alone and the avoidance of worship directed to any person, place or thing other than Allah. In essence, Islam calls man away from the worship of creation and invites him to worship only its Creator. Allah is the only one deserving man's worship as it is only by His will that prayers are answered. Hence prayers to the non-living such as the sun, fire, and to humans whether they be Jesus, Moses or even Muhammad (pbut) are rejected, as Allah informs us in the opening chapter of the Qur'an, known as Soorah Al-Faatihah, verse 4:

"You alone do we worship and from you alone do we seek help."

A Muslim believes that Allah and His creation are distinctly different entities. Neither is Allah His creation or a part of it, nor is His creation Him or a part of Him. Ultimately, it is the belief that the essence of Allah is everywhere in His creation or that His divine being is or was present in some aspects of His creation, which has provided justification for the worship of creation. Islam, hence, is a clear call to the worship of the Creator and the rejection of creation-worship in any form.

3. THE MIRACLE OF QUR'AN

"And if you are in doubt as to what We [Allah] have revealed…then produce a Soorah (chapter) like thereunto"(Soorah Baqarah 2:23)

This was the challenge put forth by Allah in the Qur'an 1400 years ago. As of yet, none has or will ever come close to meeting this challenge. Hence, as a result, multitudes throughout the centuries have believed and continue to believe in the Qur'an as a revelation beyond any human capacity. Modern scientists, for instance, have been amazed by the accuracy of scientific information presented in the Qur'an. Here are just a few examples:

In his book of embryology-'The Developing Human' [W.B. Saunders Publishing, 1982], Dr. Keith Moore added a whole chapter to discuss the scientific accuracy of the Quranic discussion of this science. Another eminent scientist, Dr. Maurice Bucaille wrote in his book-'The Bible, the Qur'an and Science":

"I could not find a single error in the Qur'an…if a man was the author of the Qur'an how could he have written facts in the 7th century A.D. that today are shown to be in keeping with modern scientific knowledge"

Facts about astronomy, the animal world and other natural phenomenon, that were alien to modern science not long ago, are scattered among the messages of Allah's Unity and His Attributes throughout the miracle that is known as al-Qur'an.

I thank you for your time. May Allah guide all of us to the truth. 


சிந்திப்பது மூளையா? இதயமா?

Monday 23 May 2011
                    மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது என்பதில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை நிலவி வந்தது.

சிந்திப்பது, மகிழ்ச்சியடைவது, இரக்கம் காட்டுவது, பொறாமை கொள்வது உள்ளிட்ட எல்லாக் காரியங்களும் இதயத்தில் தான் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை ஒரு கால கட்டத்தில் இருந்தது. நாடு, மொழி அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் இப்படித் தான் நம்பி வந்தது.

பின்னர், அறிவு சம்பந்தப்பட்டது மூளையிலும் ஆசை சம்பந்தப்பட்டது இதயத்திலும் நிகழ்வதாக ஒரு கருத்துக்கு உலகம் வந்தது. இன்றைய விஞ்ஞானிகள் வேறு முடிவுக்கு வந்து விட்டாலும் கூட இன்றைக்கும் சாதாரண மக்களின் கருத்து இதுவாகத் தான் உள்ளது.

ஒருவன் படிப்பில், சிந்தனையில் குறைவாக இருக்கும் போதும், குறைந்த மதிப்பெண் வாங்கும் போதும், மூளை இருக்கிறதா?' என்று கேட்கிறோம். ஒருவன் கொடியவனாக, இரக்கமற்றவனாக, பேராசை பிடித்தவனாக இருந்தால் அவனுக்கு இதயம் உள்ளதா என்று கேட்கிறோம்.

சிந்திப்பது மூளையின் வேலை எனவும், கவலைப்படுவது போன்றவை இதயத்தின் வேலை எனவும் மக்கள் நினைப்பதை இதிலிருந்து அறியலாம். இடைப்பட்ட காலத்தில் உலக மக்களின் கருத்து இதுவாகத் தான் இருந்தது. அது தான் இன்று வரை சாதாரண மக்களிடம் நீடிக்கிறது.

இரத்தத்தை முழு உடலுக்கும் விநியோகம் செய்வது மட்டுமே இதயத்தின் பணி; இதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதற்கு இல்லை என்பதை இன்றைய விஞ்ஞான உலகம் கண்டறிந்துள்ளது.

சிந்திப்பது சம்பந்தமான விஷயங்களும், ஆசை சம்பந்தமான விஷயங்களும் மனித உட­ன் முழு இயக்கமும் மூளையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. சிந்திப்பதும், கவலைப்படுவதும், மகிழ்ச்சியடைவதும், பேராசைப்படுவதும், கோபப்படுவதும் மூளையின் வேலை தான். அனைத்து செயல்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது.

"இதயத்தில் உனக்கு இடம் இல்லை" என்பது போன்ற வார்த்தைகளை இன்றைய விஞ்ஞானம் கேலி செய்கிறது. மூளையில் உனக்கு இடமில்லை என்று தான் கூற வேண்டும். ஒருவரை நேசிப்பதும், பகைப்பதும் கூட மூளையின் பணி தான்.

இனி நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம். சிந்தனையைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்திப் போகும்.

ஆனால், இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள்.
இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு நம் காலம் வரை வந்து சேர்ந்திருக்காது.

குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு இதயம் எனக் கூறினால் அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள். ஆனால், 'மூளை தான் சிந்திக்கிறது' என்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வாழும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். இன்றைய அறிவியல் உலகம் அதை உண்மை என ஏற்காது. இதையே காரணம் காட்டி குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்று வாதிடும்!

எனவே, அந்த இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது. இதயம் என்றும் குறிப்பிட முடியாது. ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது.

இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது? நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம். அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் கூறவல்லவன்.

அரபு மொழியில் 'கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது.

அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும், இதயத்தைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மூளை தான் எல்லாக் காரியங்களையும் நிகழ்த்துகிறது என்பதைக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறன், மூளை, இதயம் ஆகிய அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டையும் குறிக்கக்கூடிய இந்தச் சொல்லை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருக்கிறான். இதயத்தில் தான் இந்தக் காரியங்கள் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை நிலவிய காலத்தில் குர்ஆனுக்கு மொழி பெயர்ப்பு செய்தவர்கள் இச்சொல்லுக்கு இதயம் என்று மொழி பெயர்த்தார்கள். அவர்களும் திருக்குர்ஆன் உண்மையே கூறியது என்று கருதினார்கள்.

மூளை தான் எல்லாக் காரியத்தையும் செய்கிறது என்ற நம்பிக்கை நிலவுகின்ற இக்காலத்தில் அந்தச் சொல்லுக்கு மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அப்பொருளும் அச்சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் தான்.

5:25, 7:179, 9:87, 9:93, 17:46, 18:57, 63:3 ஆகிய வசனங்களில் சிந்தனையுடன் தொடர்புபடுத்தியே கல்ப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும்.

33:10, 40:18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் இதயம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலும் மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அரபு மூலச் சொல் அதற்கு இடம் தரக்கூடிய வகையில் தான் அமைந்துள்ளது.

எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோ, அதுவே இவ்வேதம் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது.

மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற உண்மையை அறிந்தவனால் தான் இவ்வாறு கூற முடியும். அது அருளப்பட்ட காலத்திலும் மறுக்கப்பட முடியாமல் காப்பாற்றி - உண்மை கண்டறியப்படும் காலத்திலும் அதை மேலும் உண்மைப்படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது தான் இறைவேதம் என்பதற்கான நிரூபனங்களில் ஒன்றாகவுள்ளது.

சத்தியபாதையை ஏற்றார் ஏபல் சேவியர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ


             புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ஏபல் சேவியர் கடந்தவாரம் தன்னுடைய அமீரக பயணத்தின்போது இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறினார். ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் பிறந்த இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கேலாக்ஸி, போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, இங்கிலாந்து, துருக்கி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா அணிக்காகவும் விளையாடியவர். மேலும் தன்னுடைய 38வது வயதில் கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுப்பெறப்போவதாகவும் அறிவித்துள்ளார். ஓய்வு பெறுவது வருத்தமாக இருந்தாலும் என்னுடைய வாழ்கையின் புதிய கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய பெயரை பைசல் சேவியர் என்று மாற்றியுள்ளார். இஸ்லாமிய மார்க்கமானது அமைதி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் நம்பிக்கை அளிப்பதாகவும் இவைகள் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது இவர் ஐ.நா.வின் சார்பில் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ளார்.



தகவல்:
அல் அராபியா.

குர்ஆன் உண்மையானதா? பைபிள் உண்மையானதா?

குர்ஆன் உண்மையானதா? பைபிள் உண்மையானதா?


குர்ஆன் உண்மையானதா? பைபிள் உண்மையானதா?

சந்தேகமின்றி தெரிந்து கொள்ள கட்டாயம் இந்த‌ 18 விடியோக்களையும் பாருங்கள்.

இந்த ஆரோக்கியமான கலந்துரையாடலை கேட்டால் உங்கள் சந்தேகம் அனைத்துக்கும் தீர்வு இதில் கிடைக்கும்.

சத்தியம் வென்றே தீரும். அசத்தியம் அழிந்தே தீரும். நிச்சயம் அசத்தியம் அழிந்தே தீரும்.



Quran  or bible debate between dr. zakir naik and dr. william cambell christian and Muslims all should watch this debate.

கிறிஸ்துவர்களும் மூஸ்லீம்களும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.

இது 18 விடியோக்கள் அடங்கியது. பொறுமையாக அனைத்து விடியோக்களையும் பார்த்து சிந்தியுங்கள்.

முதலில் Dr. William Campbell பேசும் பொழுது சுவாரஸ்யம் அற்றது போல் தோன்றலாம். சாகிர் நாயக் அவர்களின் பதில் ஆரம்பிக்கும் பொழுது மெய் மறந்து விடுவீர்கள்.

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 1


QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 2



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 3



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 4



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 5

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 6



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 7



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 8

அசிங்கங்கள், அபத்தங்கள், விஞ்ஞான முரண்பாடுகள்
இதிலுள்ள‌ அப‌த்த‌ங்க‌ளை அசிங்கங்களை, அபத்தங்களை, விஞ்ஞான முரண்பாடுளை இறைவனிட‌மிருந்து வ‌ந்த‌து என‌ கூற‌லாமா?

இறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது

யாருடைய உண்ர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை

பைபிளில் விஞ்ஞான‌ பிழைக‌ள்.

பூமி அழியுமா? அழியாதா?

இவ்வுலகம் எப்படி முடிவுக்கு வாரும் என்று பல் வேறு விஞ்ஞானிகள் ஊகக்கருத்துக்களை தருகிறார்கள். சிலர் சொல்வது சரியாகவும் சிலர் சொல்லுவது பிழையாகவும் இருக்கலாம்.

ஆனால் அழியும் அல்லது நிலைத்திருக்கும். இரண்டும் ஒரே சமயத்தில் நடக்க முடியாது.
அப்படி நடந்தால் அது விஞ்ஞான முரண்பாடாகும்.
அப்படித்தான் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.

கிறிஸ்தவ விசுவாசியை கண்டறிய விஞ்ஞான பூர்வமான சோதனை பைபிளில் உள்ளது

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன‌
என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளை துரத்துவார்கள்
நவமான புது அந்நிய மொழி பாஷைகளை பேசுவார்கள்.

மேலும் சர்ப்பங்களை கையிலெடுப்பார்கள். சாவுக்கென்றான யாதொன்றை குடித்தாலும் அவர்களுக்கொன்றும் ஆகாது. அது அவர்களை சேதப்படுத்தாது.

வியாதியஸ்தர்கள் மீது அவர்கள் கை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமடைவார்கள்.
இதை கொண்டு உண்மையான விசுவாசியை கண்டு பிடித்து விடலாம்

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 9


தொழுநோயிலிருந்து த‌ன் வீட்டை பாதுகாக்க‌ ஒரு நூத‌ன்மான‌ வ‌ழியை பைபிள் சொல்லுகிற‌து இர‌ண்டு குருவிக‌ளை எடுங்க‌ள் ஒன்றை கொன்று ம‌ர‌த்தொன்றின் மீது ஏற்றி உயிரோடிருக்கும் மற்றொரு ப‌ற‌வையை ஓடும் நீரில் ந‌னைத்து அத‌ன் பிற‌கு அந்த‌ ர‌த்த‌த்தை வீடு முழுவ‌தும் ஏழு முறை தெளிக்க‌ வேண்டும்.

தொழுநோயிலிருந்து பாதுகாக்க வீட்டுக்குள் குருவியின் இரத்தத்தை தெளிப்பதா?

மருத்துவ ரீதியாக நமக்கு தெரியும் ஒரு தாய் பிரசவித்த பிறகு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அசுத்தமாக இருப்பார்.

ஆண்குழந்தை பெற்றால் அவள் ஏழு நாட்களுக்கு அசுத்தமாக இருப்பாளாம்.அந்த அசுத்த நிலை மேலும் 33 நாட்களுக்கு நீடிக்குமாம்.

 ஆனால் பெண் குழந்தையை பெற்றால் 2 வாரங்களுக்கு அசுத்தமாக இருப்பாள் ஆனால் அந்த அசுத்தம் 66 நாட்களுக்கு நீடிக்குமாம். சுருக்கமாக சொன்னால் ஒரு பெண் மகனை பெற்ரால் 40 நாட்களுக்கு அசுத்தமாக இருப்பாள். ஆனால் அவலே ஒரு பெண் குழந்தையை பெற்றால் 80 நாளைக்கு அசுத்தமாக இருப்பாள்.

பெண்குழந்தையை பெற்றால் ஆண்குழந்தையை விட இரு மடங்கு அதிகமாக அசுத்தம் நீடிப்பது எப்படி?

விபசாரத்தை நிரூபிக்க பைபிள் ஒரு அருமையான யோசனையை சொல்கிறது. ஒரு பெண் விபசாரம் செய்துவிட்டால் என கண்டு பிடிப்பது எப்படி ?

எண்ணாகமம் அதிகாரம் 5 11 / 31

என்ன அருமையான வழி?

சந்தேகத்துக்குள்ளாகி நீதி மன்றங்களில் அவமானத்தையும் அதிக பொருட்சிலவையும் கால நேரத்தையும் வீணடிக்கும் தம்பதிகள் இந்த இலகுவான கசப்பு தண்ணீர் சோதனை ஏன் கடைபிடிக்கககூடாது?

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 10

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 11


QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 12



 நிறைவேறாத தீர்ககதரிசனம்.

பைபிள் இறைவ‌னின் வார்த்தைக‌ள் அல்ல‌

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 13


QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 14

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 15



QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 16


                         
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 17

QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 18




இதை ஆங்கிலத்தில் காண
சுட்டி http://thegrandverbalizer19.blogspot.com/2009/11/debate-quran-and-bible-in-light-of.html

----------------
இந்த ஆக்கத்தை தயவு செய்து தங்களுடைய இணையங்களிலும் வலைப்பதிவுகளிலும் மீள்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

கலைச் சொற்கள்

இணை கற்பித்தல்
அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. “அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை” என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும், ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள் ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும், அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்தவொன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் இணை கற்பித்தல் என்று இஸ்லாம் கூறுகிறது.

இவ்வாறு இறைவனுக்கு இணை கற்பித்தல், மனிதர்கள் செய்கின்ற குற்றங்களிலேயே மிகவும் பெரிய குற்றம் எனவும், இக்கொள்கையிலிருந்து திருந்திக் கொள்ளாமல் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கு மன்னிப்பு இல்லை; என்றென்றும் நரகத்தில் கிடப்பார் என்றும் இஸ்லாம் கூறுகிறது.

சொர்க்கம், சொர்க்கச் சோலைகள்
இவ்வுலகம் முழுமையாக அழிக்கப்பட்ட பின் அனைவரும் இறைவன் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். இவ்வுலகில் இறைவனையும், இறைத்தூதர்களையும் ஏற்று அவர்கள் காட்டிய வழியில் நடந்த நல்லோர்க்கு இறைவன் அளிக்கும் பரிசே சொர்க்கமாகும்.

சொர்க்கத்தில் நுழையும் ஒருவர் அதில் நிரந்தரமாக இருப்பார். விரும்பிய அனைத்தும் அவருக்கு அங்கே கிடைக்கும். கவலையோ, சோர்வோ, சங்கடமோ, மன உளைச்சலோ இல்லாமல் சொர்க்கத்தில் நுழைந்தவர்கள் இன்பத்தை அனுபவிப்பார்கள்.

தூதர்கள்
மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களிலிருந்தே தகுதியானவர்களை இறைவன் தேர்வு செய்து வாழ்க்கை நெறியைக் கொடுத்து அனுப்புவான். இவ்வாறு அனுப்பப்படுவோரை இறைத் தூதர்கள் என இஸ்லாம் குறிப்பிடுகிறது.

முதல் மனிதரிலிருந்து இறுதித் தூதராகிய நபிகள் நாயகம் வரை ஏராளமான தூதர்கள் உலகின் பல பாகங்களுக்கும், பல்வேறு மொழிகள் பேசும் மக்களுக்கும் நல்வழி காட்ட அனுப்பப்பட்டனர்.
இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களின் எண்ணிக்கை குறித்து திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகத்தின் ஆதாரப்பூர்வமான பொன்மொழிகளிலோ குறிப்பிடப்படவில்லை.

தூதர்களாக அனுப்பப்படுவோர் எல்லா வகையிலும் மனிதர்களாகவே வாழ்ந்தனர். தூதர்களாக நியமிக்கப்பட்டதால் அவர்களுக்கு இறைத்தன்மை வழங்கப்படாது. இறைவனிடமிருந்து செய்தி அவர்களுக்குக் கிடைக்கும் என்பதே அவர்களுக்குரிய முக்கிய சிறப்பாகும்.

தொழுகை
முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமைகளில் முக்கியமான கடமை தொழுகையாகும்.
தொழுகை என்பது சிறிது நேரம் நின்றும், சிறிது நேரம் குனிந்தும், சிறிது நேரம் நெற்றியை நிலத்தில் வைத்தும், சிறிது நேரம் அமர்ந்தும் ஒவ்வொரு நிலையிலும் ஓத வேண்டியவைகளை ஓதியும் நிறைவேற்றப்படும் வணக்கமாகும்.

ஒவ்வொரு நாளும் ஐந்து முறை ஐந்து நேரங்களில் தொழுகையை நிறைவேற்றி ஆக வேண்டும். இது தவிர அவரவர் விருப்பப்பட்டு தமக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொழுது இறைவனின் அன்பை பெறலாம்.

நயவஞ்சகர்கள்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொந்த ஊரான மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனா எனும் நகரில் தஞ்சமடைந்தார்கள். அங்கே அவர்களின் பிரச்சாரத்திற்கு நல்ல பலன் கிடைத்ததால் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர். இதனால் அதிகாரமும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு வந்து சேர்ந்தது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனா வருவதற்கு முன் ஆட்சியையும், அதிகாரத்தையும் அனுபவித்து வந்த சிலர், உளப் பூர்வமாக இஸ்லாத்தை ஏற்காமல் சுய நலனுக்காகவும், முஸ்லிம்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது போல் நடித்து வந்தனர்.

இவர்கள் முஸ்லிம்களைப் போலவே பள்ளிவாசலில் வந்து தொழுகையிலும் பங்கெடுப்பார்கள். போருக்கும் புறப்படுவார்கள். ஆயினும் முஸ்லிம்கள் குறித்த செய்திகளை மக்காவில் உள்ள முஸ்லிம்களின் எதிரிகளுக்கு வழங்குவதற்காகவே இவ்வாறு முஸ்லிம்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முஸ்லிம்களைப் போலவே கலந்து கொள்வார்கள்.
இவர்களைத் தான் குர்ஆன் நயவஞ்சகர்கள் எனக் குறிப்பிடுகிறது.

நம்பிக்கை கொள்வது
திருக்குர்ஆன் அதிகமான இடங்களில் ‘நம்பிக்கை கொள்வது’ ‘நம்பிக்கை கொண்டோர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது.

பொதுவாக நம்பிக்கை கொள்வது என்பதை நாம் என்ன பொருளில் புரிந்து கொள்வோமோ அந்தப் பொருளில் இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை.

மாறாக குறிப்பிட்ட சில விசயங்களை உளமாற ஏற்று நம்பிக்கை கொள்வதையே குர்ஆன் குறிப்பிடுகிறது. அல்லாஹ், வானவர்கள், இறைத்தூதர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்கள், மறுமை நாள், அங்கு நடக்கும் விசாரணை, மறுமை நாளுக்கு முன் நடக்கும் அமளிகள், நல்லோர்க்குக் கிடைக்கும் சொர்க்கம் எனும் பரிசு, தீயோர்க்குக் கிடைக்கும் நரகம் எனும் தண்டனை, மண்ணறை வேதனை, எல்லாமே இறைவனின் நாட்டப்படியே நடக்கிறது எனும் விதி போன்றவற்றை நம்புவதையே ‘நம்பிக்கை கொள்வது’ என குர்ஆன் குறிப்பிடுகிறது.

நரகம்
அல்லாஹ்வுடைய மற்றும் அவனுடைய தூதர்களின் வழியைப் பின்பற்றாத மக்களுக்கு மறுமையில் விசாரணைக்குப் பிறகு வழங்கப்படும் தண்டனையே நரகம் எனப்படும்.
சில குற்றங்கள் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

இக்குற்றங்களைத் தவிர ஏனைய குற்றங்களில் ஈடுப்பட்டவர்கள் இறைவனின் கருணையால் மன்னிக்கப்பட்டால் சொர்க்கம் செல்வார்கள். மன்னிக்கப்படாவிட்டால் தங்களது தவறுகளுக்கேற்ப தண்டனைகளை அனுபவித்து விட்டுப் பிறகு சொர்க்கம் செல்வார்கள்.

நோன்பு
வைகறையிலிருந்து சூரியன் மறையும் வரை இறைவனுக்காக உண்ணாமலும், பருகாமலும் குடும்ப வாழ்வில் ஈடுபடாமலும் இருக்கும் கட்டுப்பாடே நோன்பு எனப்படும்.
ஆண்டுதோறும் ரமலான் எனும் மாதம் முழுவதும் அவ்வாறு நோன்பு நோற்பது கட்டாயமாகும். இது தவிர சில குற்றங்களுக்கான பரிகாரமாகவும் நோன்பு கூறப்பட்டுள்ளது.

வானவர்கள்
இறைவனது படைப்புகளில் வானவர்கள் என்றொரு இனம் இருப்பதாக திருக்குர்ஆன் கூறுகிறது. இவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். இவர்களில் ஆண் பெண் என்ற பால் வேற்றுமை இல்லை. எனவே இனப் பெருக்கம் செய்ய மாட்டார்கள். இவர்களை இறைத்தூதர்கள் தவிர மற்ற மனிதர்கள் காண இயலாது. ஏக இறைவன் தனித்தே தனது காரியங்களை ஆற்றவல்லவன் என்றாலும் வானவர்கள் என்ற இனத்தைப் படைத்து அவர்கள் மூலம் பல்வேறு வேலைகளை வாங்குகிறான்.

அல்லாஹ்
அல்லாஹ் என்பது அகில உலகையும் படைத்துப் பராமரிக்கும் சர்வ அதிகாரமும், வல்லமையும் படைத்த ஏக இறைவனை மட்டுமே குறிக்கும் அரபு மொழிச் சொல்லாகும்.

நபிகள் நாயகத்துக்கு முன்பே இச்சொல்லை அரபுகள் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் வணங்கி வந்த சிலைகளை வேறு வார்த்தைகளில் தான் குறிப்பிட்டார்களே தவிர அல்லாஹ் எனக் கூறியதில்லை.
அகில உலகையும் படைத்துப் பராமரிக்கும் ஒரே கடவுள் இருக்கிறான்; அவன்தான் அல்லாஹ். மற்ற தெய்வங்கள்யாவும் அல்லாஹ்விடம் பெற்றுத் தரும் குட்டி தெய்வங்கள் என்பதே அவர்களின்
நம்பிக்கையாக இருந்தது.

அல்லாஹ்வுக்கு மனைவியும், மக்களும் இல்லை. அல்லாஹ்வுக்கு பெற்றோர் இல்லை. அதனால் உடன் பிறப்புகளும் இல்லை. அல்லாஹ்வுக்கு இயலாதது எதுவும் இல்லை. அல்லாஹ்வுக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை. தூக்கம், மறதி, அசதி, களைப்பு, பசி, தாகம், இயற்கை உபாதை, முதுமை, நோய் என எந்த விதமான பலவீனமும் அல்லாஹ்வுக்கு இல்லை.
எந்த விதமான தேவையும் அவனுக்கு அறவே இல்லை. இத்தகைய இலக்கணங்களை யாவும் ஒருங்கே கொண்டிருப்பவன்தான் அல்லாஹ்.

அய்யூப்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். யூத கிருஸ்த்தவர்கள் இவரை யோபு என்பர். இவ்வுலகில் பல்வேறு நோய்களாலும், வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர்.

அரஃபாத்
மக்காவிற்கு வெளியே அமைந்துள்ள மாபெரும் மைதானத்தின் பெயரே அரஃபா அல்லது அரஃபாத் ஆகும். ஹஜ் கடமையை நிறைவேற்றுபவர்கள் ஹஜ் மாதம் பிறை ஒன்பதில் இம்மைதானத்தில் குழுமுவது கட்டாயக் கடமையாகும். இம்மைதானத்தில் சிறிது நேரமாவது தங்காவிட்டால் ஹஜ் நிறைவேறாது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடாரமடித்து இங்கே தங்குவார்கள். இந்த நாளில் சிறப்பான ஒரு சொற்பொழிவும் நிகழ்த்தப்படும்.

அர்ஷ்
எல்லாம் வல்ல ஏக இறைவன் வீற்றிருந்து ஆட்சி செய்யும் ஆசனமே அர்ஷ் எனப்படும். இது வானங்களையும் பூமியையும் விட மிகவும் பிரம்மாண்டமானது. இறைவன் அர்ஷின் மீது வீற்றிருக்கிறான் என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

அல்யஸஉ
அல்யஸஉ என்பார் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி திருக்குர்ஆனில் 6:86, 38:48, ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. அதிகமான விபரங்கள் எதுவும் இவரைப் பற்றிக் கூறப்படவில்லை.

அன்ஸார்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களை ஏற்றுக் கொண்ட தோழர்களும் மக்காவில் இருந்து விரட்டப்பட்டு மதீனாவில் தஞ்சம் புகுந்தனர். அவ்வாறு தஞ்சம் புகுந்தவர்களை அரவணைத்து ஆதரவளித்து பேருதவி செய்தவர்களே அன்ஸார்கள் எனப்படுவர். இவர்களில் ஒவ்வொருவரும் அகதிகளாக வந்த மக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டு அவருக்கு தங்களின் வீடு, சொத்து, வியாபாரம், ஆடைகள் அனைத்திலும் சரிபாதியாக பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

ஆதம்
இஸ்லாமிய நம்பிக்கைப் படி அல்லாஹ் முதல் மனிதரைக் களி மண்ணால் படைத்தான். அவ்வாறு படைக்கப்பட்டவரின் பெயர்தான் ஆதம். இவர்தான் முழு உலகில் வாழும் அனைத்து மக்களின் தந்தையாவார். அவரிலிருந்து அவரது பெண் துணையை இறைவன் படைத்தான். கிருத்தவர்கள் இவரை ஆதாம் என்பர்.

ஆது
‘ஹுத்’ எனும் இறைத்தூதர் அனுப்பப்பட்ட சமுதாயமே ‘ஆது’ சமுதாயம் எனப்படும். இவர்கள் மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்தனர். ஹுத் நபியை ஏற்க மறுத்து அக்கிரமம் புரிந்ததால் வறண்ட காற்றை அனுப்பி இறைவன் அவர்களை அழித்தான்.

இஞ்சீல்
இவ்வேதம் ஈஸா நபிக்கு அருளப்பட்ட வேதம் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.

இஃதிகாஃப்
இச்சொல்லுக்குத் தங்குதல் என்று பொருள். இஸ்லாமிய நம்பிக்கைப்படி சிறிது நேரம் அல்லது சில நாட்கள் பள்ளிவாசலில் தங்கி இறை நினைவிலும், வழிபாட்டிலும் இருப்பது தான் இஃதிகாஃப் எனப்படும். ஒருநாள் இஃதிகாஃப் இருப்பதாக ஒருவர் முடிவு செய்தால், அந்த நாள் முழுவதும் குடும்ப வாழ்க்கை, கொடுக்கல் வாங்கல் போன்ற எந்த அலுவலிலும் ஈடுபடக் கூடாது.
ஒரேயடியாக உலகைத் துறப்பதைத் தடை செய்த இஸ்லாம் குடும்பத்துக்கோ, உலகத்துக்கோ பாதிப்பு ஏற்படாத இந்த சிறிய அளவிலான தவத்தை மட்டும் அனுமதிக்கிறது. ஒரிரு நாட்கள் இவ்வாறு பள்ளிவாசலில் தங்கி உலகத் தொடர்பைத் தற்காலிகமாக அறுத்துக் கொண்டவர் வெளியே வந்ததும் பக்குவம் பெற்றவராக நடப்பார். அவருக்கும், உலகுக்கும் இதனால் பயன் கிடைக்கும்.

இத்தா
கணவனை இழந்த பெண்களும், கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களும் குறிப்பிட்ட காலம் வரை மறுமணம் செய்வதைத் தள்ளிப் போட வேண்டும். இந்த கால கட்டமே இத்தா எனப்படும். கணவனை இழந்த பெண் நான்கு மாதம் பத்து நாட்களும் கழிப்பதற்குள் மறுமணம் செய்யக் கூடாது. விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் காலம் முழுமை அடைவதற்குள் மறுமணம் செய்யக் கூடாது.

இத்ரீஸ்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி திருக்குர்ஆன் 19:56, 21:85 ஆகிய இரு வசனங்களில் மட்டுமே குறிப்பிடுகிறது. அதிகமான விபரம் எதுவும் இவரைப் பற்றி குர்ஆனில் கூறப்படவில்லை.

இப்ராஹீம்
இறைத்தூதர்களிலேயே அதிகமான அருள் பெற்றவர் இப்ராஹீம் தான். மற்றவர்களுக்கு வழங்கிய அளவுக்கு அற்புதங்கள் வழங்கப்படாவிட்டாலும் இவரது தகுதியைப் பெரிதும் அல்லாஹ் உயர்த்தியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) மட்டுமின்றி இஸ்ஹாக், யஃகூப், தாவூத், ஸுலைமான், அய்யூப், யூசுப், மூஸா, ஹாரூன் அனைவரும் இவரது வழித்தோன்றல்களே. யூதர்களும், கிருத்தவர்களும், முஸ்லிம்களும் பெரிதும் மதிக்கக்கூடிய மகானாகவும் இவர்கள் திகழ்கிறார்கள். இவரை ‘ஆப்ரஹாம்’ என்று யூத கிருத்தவர்கள் கூறுவார்கள்.

இப்லீஸ்
முதல் மனிதர் ஆதம் படைக்கப்படுவதற்கு முன் நல்லோரில் ஒருவனாக இருந்தவன் இப்லீஸ். இவன் நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் எனும் படைப்பைச் சேர்ந்தவன். முதல் மனிதரைப் படைத்தவுடன் அவருக்கு மரியாதை செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். வானவர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினார்கள். அவர்களுடன் இருந்த இப்லீஸ் ஆதமுக்குப் பணிவது தனக்கு இழுக்கு எனக் கருதினான். மரியாதை செய்ய மறுத்தான். மனிதர்களை வழி கெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் வழிகெடுக்க முடியும் என இறைவனிடம் வேண்டிணான்.
“என்னையே முழுமையாக நம்பும் நல்லோரை உன்னால் கெடுக்க முடியாது. தனது மனோ இச்சைகளுக்கு அடிமைப் பட்டவர்களையே உன்னால் வழி கெடுக்க முடியும்” என்று கூறி இறைவன் வாய்ப்பளித்தான். இவனது சந்ததிகள் தாம் ஷைத்தான்கள் எனப்படுவோர்.

இம்ரான்
இவர் ஈஸா நபியின் தாயாரான மரியம் அவர்களுக்குத் தந்தையாவார். இவரைப் பற்றி திருக்குர்ஆன் 3:33, 3:35, 66:12 ஆகிய மூன்று இடங்களில் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைப் பற்றி வேறு விபரங்கள் எதுவும் குர்ஆனில் கூறப்படவில்லை.

இல்யாஸ்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் தமது சமுதாயத்தின் பல கடவுள் நம்பிக்கையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த விவரம் தவிர அதிகமான விவரம் இவரைப் பற்றிக் கூறப்படவில்லை. (திருக்குர்ஆன் 37:123, 6:85)

இஸ்தப்ரக்
இஸ்தப்ரக் என்பது ஒருவகைப் பட்டாடையின் பெயராகும். இது பட்டாடைகளில் அதிக அடர்த்தி உடையதாகும்.

இஸ்ராயீல்
இப்ராஹீம் நபியின் மகன் இஸ்ஹாக். இஸ்ஹாக்குடைய மகன் யஃகூப்.
யஃகூப்பின் மற்றொரு பெயர் இஸ்ராயீல். இஸ்ரவேலர்கள் எனப்படுவோர் யஃகூப் நபியின் வழித்தோன்றல்களாக இருப்பதால் அவர்கள் இஸ்ராயீலின் மக்கள் என்று கூறப்படுகின்றனர். கிறித்தவர்கள் இவரை இஸ்ரவேல், யாகோப், ஜேக்கப் என்பர்.

இஸ்மாயீல்
இப்ராஹீம் நபியின் மகன் இஸ்மாயீல். இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இஸ்மாயீலின் வழியில் தான் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தார்கள். யூத, கிருத்தவர்கள் இவரை ‘இஸ்மவேல’; என்பர்.

இஸ்ஹாக்
இப்ராஹீம் நபியின் இன்னொரு புதல்வர் இஸ்ஹாக். இவரும் இறைத்தூதர்களில் ஒருவர் என்பதைத் தவிர இவரைப் பற்றி அதிகமான விபரங்கள் ஏதும் குர்ஆனில் கூறப்படவில்லை. பல நபிமார்களுடன் இணைத்து இவரும் நல்லவராக இருந்தார் என்று குர்ஆன் கூறுகிறது. இவரது பிரச்சாரம் அதில் சந்தித்த பிரச்சினைகள் பற்றி ஏதும் கூறப்படவில்லை.

இஹ்ராம்
ஹஜ் அல்லது உம்ராவை நிறைவேற்றத் துவங்கும் போது எடுக்கும் உறுதிமொழியே இஹ்ராம் எனப்படும். இவ்வாறு உறுதி மொழி எடுக்கும்போது தைக்கப்படாத ஆடையை அணிய வேண்டும்.

ஈஸா
கிறித்தவர்கள் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடும் இயேசுவை திருக்குர்ஆன் ஈஸா எனக் கூறுகிறது. ஈஸா நபியவர்கள் சில அற்புதங்கள் நிகழ்த்தியதையும், தந்தையின்றிப் பிறந்ததையும் இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அவரும் மற்ற இறைத்தூதர்களைப் போல் ஒரு தூதராவார். இறைவனுக்கு மகன் இருக்க முடியாது என்பதால் இவர் இறை மகன் அல்லர் என்று குர்ஆன் கூறுகிறது.

உம்ரா
மக்கா சென்று கஅபாவைச் சுற்றுதல், கஅபா வளாகத்தில் தொழுதல், ஸஃபா மர்வா மலைகளுக்கிடையே ஓடுதல் உம்ரா எனப்படும். உம்ரா என்பது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கென தைக்கப்படாத ஆடையை அணிய வேண்டும். இந்த கால கட்டத்தில் இல்லறம் நடத்துதல், வேட்டையாடுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

உஸ்ஸா
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையுடையோர் வணங்கி வந்த சிலைகளில் ஒரு சிலையின் பெயரே உஸ்ஸா எனப்படும்.

ஃபிர்அவ்ன்
யூத, கிருத்தவர்களால் ‘பாரோன்’ எனக் குறிப்பிடப்படும் ஃபிர்அவ்ன் வலிமைமிக்க மன்னனாகத்; திகழ்ந்தவன். தன்னையே கடவுள் என வாதிட்டவன். தனது நாட்டில் சிறுபான்மையினராக இருந்த இஸ்ரவேலர்களைக் கொடுமைப்படுத்தினான். அவர்களில் ஆண்களை மட்டும் கொன்று குவித்தான். இவனுக்கு ஓரிறைக் கொள்கையை உணர்த்தவும், அவனது கொடுமைகளைத் தட்டிக் கேட்கவும் மூஸா(மோசே) ஹாரூன் (ஆரோன்) ஆகிய இருவரையும் தூதர்களாக இறைவன் அனுப்பினான்.
ஆயினும் அவன் திருந்தவில்லை. அவனும், அவனது படையினரும் கடலில் முழ்கடிக்கப்பட்டனர்.

கஅபா
முதல் மனிதர் படைக்கப்பட்டவுடன் அவர் இறைவனை வணங்குவதற்காக எழுப்பிய ஆலயம் தான் கஅபா - 3:96. இதிலிருந்து ஆதம் (அலை) இங்கு தான் வசித்தார்கள் என்பதை அறியலாம்.
செவ்வகமான அக்கட்டடம் ஆதமும், அவரது பிள்ளைகளும் உள்ளே சென்று தொழப் போதுமானதாகும். ஆனால் இன்று அனைவரும் உள்ளே தொழ முடியாது என்பதால் அதைச் சுற்றி அதற்கு வெளியே தொழுகிறார்கள். அதைச் சுற்றியுள்ள வளாகமும், கட்டமும் தான் மஸ்ஜிதுல் ஹராம் - புனிதப் பள்ளி எனப்படுகிறது. அவருக்கு பின் கஅபா சிதிலமடைந்து பின்னர் இப்ராஹீம் நபியவர்கள் இறைக் கட்டளைப்படி அந்த பாலைவனத்தைக் கண்டுபிடித்து தமது மனைவியையும், மகன் இஸ்மாயீலையும் குடியமர்த்தினார்கள்.
இறைவனின் அற்புதமான வற்றாத ஸம்ஸம் கிணறு ஏற்படுத்தப்பட்ட பின் கால் கோடி மக்களுக்கு அது தினமும் பயன்படுகிறது. அந்தத் தண்ணீர் காரணமாக அந்த பாலைவனம் ஊராக ஆனது. எனவே அங்கே முதல் ஆலயத்தை தந்தையும் மகனுமாக மறுபடியும் கட்டினார்கள்.

கிப்லா
கிப்லா என்றால் முன்னோக்குதல், முன்னோக்கும் இலக்கு என்பது பொருள். இஸ்லாமிய வழக்கில் அல்லாஹ்வைத் தொழும் போது நோக்கும் இலக்கு கிப்லா எனப்படுகிறது. முஸ்லிம்கள் மக்காவில் அமைந்துள்ள உலகின் முதல் ஆலயமான கஅபா ஆலயத்தை நோக்கியே தொழ வேண்டும.; கஅபா ஆலயத்தையே தொழுவதாக எண்ணக் கூடாது. அது ஒரு கட்டடமே. அதற்கு இறைத்தன்மை ஏதும் கிடையாது. கஅபாவிடம் எந்தக் கோரிக்கையும் வைக்க கூடாது. எதையும் நோக்காமல் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. அவ்வாறு நோக்குவது உலகில் ஏக இறைவனை வணங்குவதற்காக முதலில் எழுப்பப்பட்ட ஆலயமாக இருக்கட்டும் என்பதுதான் இதற்குக் காரணம்.

பலரும் சேர்ந்து தொழும் இடங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் நோக்கினால் ஒழுங்கு கெடும். இதற்காகத்தான் அனைவரும் ஒன்றையே நோக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மேற்குத் திசையை வணங்குவதாக இந்தியாவில் சிலர் நினைக்கின்றனர். இந்தியாவுக்கு மேற்கே கஅபா ஆலயம் அமைந்திருப்பதே இதற்கு காரணம். மற்ற நாடுகளில் வடக்கு, தெற்கு, கிழக்கு என்று பல திசைகளிலும் முஸ்லிம்கள் தொழுவார்கள்.
மக்காவுக்குச் சென்று கஅபாவை நேரில் கண்டால் அதைச் சுற்றி அனைத்துத் திசைகளிலும் முஸ்லிம்கள் தொழுவார்கள். எனவே திசையை முஸ்லிம்கள் வணங்குவதாகக் கருதுவது தவறாகும்.

குர்பானி
முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களில் இரண்டாவது பெருநாளாகக் கருதப்படும் ஹஜ் பெருநாளில் இறைவனுக்காக ஆடு, மாடு அல்லது ஒட்டகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அறுத்துப் பலியிடுதல் குர்பானி எனப்படும். இவ்வாறு பலியிடுவது இறைவனைச் சென்றடையும் என்று கருதக் கூடாது. ஏனெனில் அவற்றின் இரத்தங்களோ, இறைச்சிகளோ அல்லாஹ்வை அடையாது என்று திருக்குர்ஆன் அறிவிக்கிறது. (22:37)

பொருளாதாரம் தொடர்பான எதையும் இறைவனுடன் தொடர்புபடுத்தினால் அவற்றை ஏழைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு. எனவே ஏழைகள் மகிழ்ச்சியுடன் பெருநாளைக் கொண்டாடவும், இப்ராஹீம் நபியைப் போல் எத்தகைய தியாகத்திற்கும் தயார் என்பதை உணர்த்தும் வகையிலும் தான் இது கடமையாக்கப்பட்டுள்ளது.

தவாஃப்
தவாஃப் என்றால் சுற்றுதல் எனப் பொருள். இஸ்லாமிய வழக்கத்தில் தவாஃப் என்பது கஅபா ஆலயம் நமக்கு இடது கைப்பக்கம் இருக்குமாறு ஏழு தடவை சுற்ற வேண்டும். இதுதான் தவாஃப் என்பது. இது ஹஜ் மற்றும் உம்ராவின் ஒரு பகுதியாகும்.

தவ்ராத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் அருளப்பட்டது போல மூஸா நபிக்கு அருளப்பட்ட வேதமே தவ்ராத். தவ்ராத் பற்றியும், மூஸா நபி பற்றியும் பல இடங்களில் குர்ஆனில் கூறப்பட்டிருக்கிறது.

தாலூத்
தாவூத் நபி சாதாரணப் படை வீரராக இருக்கும்பொழுது இறைவனால் நியமிக்கப்பட்ட மன்னரே தாலூத். இவரது தலைமையில் ஜாலூத் என்ற கொடியவன் தோற்கடிக்கப்பட்டான்.

தாவூத்
இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஸுலைமான் நபியின் தந்தையுமாவார். தாவீது ராஜா என்று கிறித்தவர்கள் இவரைக் குறிப்பிடுவார்கள்.

துப்பஉ
துப்பஉ என்ற பெயரில் ஒரு சமுதாயம் இருந்ததாகவும், அவர்கள் குற்றம் புரிந்ததால் அழிக்கப்பட்டதாகவும் குர்ஆன் கூறுகிறது. அவர்களைப் பற்றிய அதிகமான விபரம் ஏதும் கூறப்படவில்லை.

துல்கர்னைன்
இவர் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆட்சி புரிந்த நல்ல மன்னர் என்று குர்ஆன் கூறுகிறது. இவரைப் பற்றி குர்ஆன் 18:83 முதல் 18:98 வரை கூறப்பட்டுள்ளது.

துல்கிஃப்ல்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி 21:85, 38:48 ஆகிய இரு வசனங்களில் மட்டுமே திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. அதிகமான விபரம் எதுவும் இவரைப் பற்றி கூறவில்லை.

நபிமார்கள்
நபி என்ற சொல் அறிவிப்பவர் என்று பொருள்படும். இஸ்லாமிய மரபில் இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்று மக்களுக்கு அறிவிப்பவர் என்று பொருள். நபிமார்கள் எத்தனை பேர் என்பது குறித்து குர்ஆனிலோ நபிகள் நாயகத்தின் போதனைகளிலோ குறிப்பிடப்படவில்லை.

நூஹ்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் மிகவும் ஆரம்ப காலத்தில் அனுப்பப்பட்ட தூதராவார். குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களில் ஆதம், இத்ரீஸ் தவிர மற்ற எல்லா நபிமார்களுக்கும் இவர் முந்தியவராவார்.

பஜ்ரு
பஜ்ர் என்பது ஐந்து நேரத் தொழுகையில் வைகறையில் தொழப்படும் முதல் தொழுகையின் பெயர் ஆகும். சில இடங்களில் வைகறை நேரத்தையும் இச்சொல் குறிக்கும்.

பாபில் நகரம்
திருக்குர்ஆனில் இந்நகரம் பற்றி 2:102 வசனத்தில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. இது எங்கே இருக்கிறது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலோர் இது ஈராக்கில் இருந்த நகரம் எனக் கூறுகின்றனர்.

மத்யன்
இந்நகரம் ஷுஐப் நபி அவர்கள் வாழ்ந்த நகரமாகும். இந்நகர மக்கள் அளவு நிறுவைகளில் மோசடி செய்பவர்களாகவும், பல தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். இவர்கள் இறுதிவரை திருந்தாததால் அழிக்கப்பட்டனர்.

மர்யம்
இவர் ஈஸாவின் தாயார். கிருத்தவர்கள் இவரை மேரி என்பர். திருக்குர்ஆனில் மிகச் சிறப்பித்துக் கூறப்படும் பெண்மணி இவர்தான்.

மன்னு, ஸல்வா
மன்னு, ஸல்வா என்பது மூஸா நபியின் சமுதாயத்திற்கு இறைவன் வானிலிருந்து சிறப்பாக வழங்கிய இரண்டு உணவுகளாகும். இவ்வுணவுகள் யாவை என்பது குறித்து திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ விபரம் ஏதும் கூறப்படவில்லை. ஆயினும் காளான் என்பது மன்னு என்ற உணவைச் சேர்ந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். (பார்க்க புகாரி : 4478, 4639,5708) அவ்வுணவுகள் யாவை என்பதை அறிந்து கொள்வதால் எந்த நன்மையும் இல்லை. இறைவன் தன் புறத்திலிருந்து சிறப்பாக அந்த சமுதாயத்திற்கு உணவளித்தான் என்ற அடிப்படையை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது.

மனாத்
நபிகள் நாயகம் காலத்தில் வாழ்ந்த பல கடவுள் நம்பிக்கை உடையவர்கள் வணங்கி வந்த சிலைகளில் ஒரு சிலையின் பெயரே மனாத்.

மஷ்அருல் ஹராம்
மஷ்அருல் ஹராம் என்பது மக்காவிற்கு வெளியே அமைந்துள்ள முஸ்தலிபா எனும் திடலில் இருக்கும் ஒரு மலைக்குன்றின் பெயராகும்.

மஸீஹ்
ஈஸா என்னும் சொல்லைப் பார்க்கவும்.

மஸ்ஜிதுல் ஹராம்
கஅபா என்னும் சொல்லைப் பார்க்கவும்.

முஸ்லிம் - முஸ்லிம்கள்
முஸ்லிம் என்பது பிறப்பின் அடிப்படையில் கிடைக்கும் பெயர் அல்ல. நடத்தையின் மூலம் ஒருவனுக்குக் கிடைக்கும் பெயராகும். இச்சொல்லின் பொருள் கட்டுப்பட்டு நடப்பவன்.
இஸ்லாமிய நம்பிக்கைப்படி இதன் பொருள் ‘அல்லாஹ் கடமையாக்கியவைகளைச் செயல்படுத்தி, அல்லாஹ் தடை செய்தவற்றை விட்டும் விலகி அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்’ என்பதாகும். இச்சொல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டுமின்றி அவர்களுக்கு முன் வந்த இறைத்தூதர்களை ஏற்று அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் இச்சொல்லைத் தமிழ்ப்படுத்தாமல் எல்லா இடங்களிலும் முஸ்லிம் என்றே குறிப்பிடுகிறோம்.

இச்சொல்லை தமிழக முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் முஸ்லீம் என்று நெடிலாக உச்சரித்தும் எழுதியும் வருகின்றனர். அது தவறாகும். முஸ்லிம் என்பதே சரியாகும்.

மூஸா
திருக்குர்ஆனில் மிக அதிகமான இடங்களில் குறிப்பிடப்படும் இறைத்தூதர் ஆவார்கள். ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்கள். மூஸாவிடம் அல்லாஹ் நேரடியாகப் பேசினான். கிருத்தவர்கள் இவரை மோஸே என்பர்.

யஃகூப்
இஸ்ராயீல் என்னும் சொல்லைப் பார்க்கவும்.

யஃஜூஜ், மஃஜூஜ்
இது ஒரு கூட்டத்தினரின் பெயராகும். இக்கூட்டத்தினர் துல்கர்னைன் என்ற ஆட்சியாளரின் காலத்தில் மிகவும் அக்கிரமங்கள் செய்து வந்தனர். அவர்களை இரு மலைகளுக்கு அப்பால் வைத்து இரண்டுக்குமிடையே இரும்புச் சுவர் எழுப்பி அவர் தடுத்துவிட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க 18:94, 21:96)

யஸ்ரிப்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு, தஞ்சமடைந்த ஊரின் பெயர்தான் யஸ்ரிப். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவ்வூரில் செல்வாக்குப் பெற்றவுடன் மதீனத்துன் நபி (நபியின் நகரம்) என்று பெயர் மாறி பின்னர் மதீனா எனச் சுருங்கியது.

யஹ்யா
இவர் ஜகரிய்யா நபியின் மகனும் இறைத்தூதருமாவார். இவர் ஜகரிய்யா நபியின் தள்ளாத வயதில் பிறந்தவர். யூத, கிருத்தவர்கள் இவரை யோவான் என்பர்.

யூஸுஃப்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். மற்ற இறைத்தூதர்களிலிருந்து பலவகையான தனிச் சிறப்புகள் இவருக்கு உள்ளன. பாரம்பரியம், குணம் என்ற அடிப்படையில் மிகச் சிறந்தவர் ஒருவர் இருக்கவேண்டுமென்றால் அதற்கு முதல் தகுதி பெற்றவர் இவராகத்தான் இருக்க முடியும். இவரும் இறைத்தூதராக இருந்தார். இவரது தந்தை யஃகூப் என்றழைக்கப்படும் இஸ்ராயீல். இவரும் இறைத்தூதராவார். அவருடைய தந்தை இஸ்ஹாக். அவரும் இறைத்தூதராவார். அவருடைய தந்தை இப்ராஹீம். அவரும் இறைத்தூதர் ஆவார். இந்த கருத்தில் நபிமொழியும் உள்ளன. (புகாரி 3382, 3390, 4688)
குர்ஆனில் இவருடைய வரலாறுதான் சிறுபிராயம் தொடங்கி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. யூஸுஃப் என்ற பெயரில் அமைந்த அத்தியாயம் பெரும் பகுதி இவரது வரலாறால் நிரம்பியுள்ளது. இவருடைய வரலாற்றை அழகிய வரலாறு என்று அல்லாஹ்வும் சிலாகித்துக் கூறியுள்ளான். இவரைப் பற்றி அறிந்து கொள்ள சிரமப்படத் தேவையில்லை. யூஸுஃப் அத்தியாயத்தில் ஒரே இடத்தில் இவரது வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளதைக் காண்க.

யூனுஸ்
இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரது சமுதாயத்தினர் கடுமையாக எதிர்த்தாலும் இறைவனின் தண்டனை வரப்போகும் அறிகுறிகள் தென்பட்டவுடனே அவர்கள் திருந்திக் கொண்டனர். அறிகுறிகள் தென்பட்டவுடன் திருந்திக் கொண்ட வேறு எந்தச் சமுதாயமும் கிடையாது. இவருக்கே தெரியாமல் இவரது சமுதாயத்தை இறைவன் காப்பாற்றியதால் இவர் இறைவனிடம் கோபித்துக் கொண்டு சென்றார். எனவே அவரை அல்லாஹ் தண்டித்தான்.

ருகூவு
பணிதல் என்பது இதன் பொருள். இஸ்லாமிய வழக்கத்தில் தொழுகையில் குனிந்து சிறிது நேரம் நின்று கூற வேண்டியவற்றைக் கூறுவது ருகூவு எனப்படும். பணிதல் என்ற பொருளிலும், தொழுகையின் ஒரு நிலை என்ற பொருளிலும் திருக்குர்ஆனில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த இடங்களில் எவ்வாறு பொருள் கொள்வது என்பதைச் சற்று கவனித்தால் கண்டு கொள்ளலாம்.

ரூஹு, ரூஹுல் குதுஸ்
வானவர்களின் தலைவராக திகழ்பவர் ஜிப்ரயீல் எனும் வானவர். இவர் திருக்குர்ஆனில் பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகிறார். ரூஹு, ரூஹுல் குதுஸ் என்றும் குறிப்பிடப்படுகிறார். ரூஹு என்றால் உயிர் என்றும், ரூஹுல் குதுஸ் என்றால் பரிசுத்த உயிர் என்றும் பொருள்.

லாத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல கடவுள் நம்பிக்கையுடையவர்கள் வணங்கி வந்த சிலைகளில் ஒரு சிலையின் பெயர் லாத்.

லூத்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் இப்ராஹீம் நபியின் சமகாலத்தவராக இருந்தார். ஆயினும் வேறு பகுதியில் இவர் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார். இவரது சமுதாயம் பல கடவுள் நம்பிக்கையில் ஊறித் திளைத்தது மட்டுமின்றி ஆண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார்.

வஹீ
வஹீ என்றால் அறிவித்தல் என்பது பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் வஹீ என்பது இறைவன் தான் கூற விரும்பும் செய்திகளைத் தனது அடியார்களுக்குத் தெரிவித்தல் என்பது பொருளாகும்.

ஷுஐப்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததுடன் அவரது சமுதாயத்தில் நிலவிய பொருளாதாரச் சுரண்டலையும், அளவு நிறுவைகளில் மோசடி செய்ததையும் கண்டித்துப் பிரச்சாரம் செய்தார்.

ஷைத்தான்
இப்லீஸ் என்னும் சொல்லைப் பார்க்கவும்.

ஸஃபா, மர்வா
இவ்விரண்டும் மக்காவில் உள்ள இரு மலைக் குன்றுகளாகும். இந்தப் பாலைவனம் ஊராக உருவாவதற்கு முன் முதன்முதலில் இப்றாஹீம் நபி தமது மனைவியையும், கைக்குழந்தையான மகன் இஸ்மாயீலையும் இறைக்கட்டளைப்படி இங்கே குடியமர்த்தினார். அப்போது குழந்தை தாகத்தால் தவித்த போது இஸ்மாயீலின் தாயார் இவ்விரு மலைக்குன்றுகள் மீதும் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக ஓடி ஏறி ஏதாவது வணிகக் கூட்டம் செல்கிறதா? என்று பார்த்தார்கள். அவர்களிடம் தண்ணீர் வாங்கி குழந்தையின் தாகத்தைத் தணிக்க எண்ணினார்கள். அதற்கிடையே அல்லாஹ் குழந்தை கிடந்த இடத்தில் அற்புத நீரூற்றை ஏற்படுத்தினான். (புகாரி : 3364, 3365)

எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப் போகாத தன்மை இதற்கு உண்டு. இங்கே கால் கோடிக்கும் அதிகமான மக்கள் அன்றாடம் பயன்படுத்தியும், கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கு எடுத்துச் சென்றும் அது ஊறிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாம் மெய்யான மார்க்கம் என்பதற்குச் சான்று பகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த இருமலைகளில் இஸ்மாயீலின் தாயார் ஓடியது போல் ஹஜ் செய்வோர் ஓடி அந்தத் தியாகத்தை மதிக்க வேண்டும். ஒரு பெண் தன்னந்தனியாக கைக் குழந்தையுடன் ஆள் அரவமற்ற வெட்ட வெளியில் தங்கிய தியாகத்தை இறைவன் மதித்து அவரைப் போலவே அவ்விரு மலைகளுக்கும் இடையே நம்மையும் ஓடச் செய்கிறான்.

ஸகாத்
கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர். இஸ்லாத்தைப் பொருத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. 87 கிராம் தங்கம் அல்லது அதன் மதிப்பிற்குரிய பணம், வெள்ளி மற்றும் வர்த்தகப் பொருட்கள் வைத்திருப்போர் அதில் கட்டாயமாக இரண்டரை சதவிகிதம் வழங்குவது ஸகாத் எனப்படும்.

குடியிருக்கும் வீடு, பயன்படுத்தும் வாகனம் மற்றும் வீட்டு உயயோகப் பொருட்கள் தவிர மற்ற அனைத்துக்கும் மதிப்பிட்டு இரண்டரை சதவிகிதம் வழங்கியாக வேண்டும். அதுபோல் விளை பொருட்களில் நீர் பாய்ச்சி, விளைபவற்றில் ஐந்து சதவிகிதத்தை அறுவடை தினத்தில் வழங்கி விட வேண்டும். நீர் பாய்ச்சாமல் மானாவாரியாக விளைபவற்றில் பத்து சதவிகிதம் அறுவடை தினத்தில் வழங்கி விட வேண்டும். அழுகும் பொருட்கள் மட்டும் விதிவிலக்குப் பெறும்.
நாற்பது ஆடுகள், முப்பது மாடுகள், ஐந்து ஒட்டகங்களுக்கு மேல் வைத்திருப்போர் அதற்கென நிர்ணயிக்கப்பட்டதைக் கொடுக்க வேண்டும். (உதாரணமாக நாற்பது ஆடுகளுக்கு ஒரு ஆடு). இஸ்லாமிய அரசாக இருந்தால் கட்டாயமாக வசூலிக்கப்படும். (9:103)

ஸகாத்தை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் உள்ளன. ஸகாத் குறித்த ஏனைய சட்டங்கள் நபிமொழிகளில் தான் காணக் கிடைக்கிறது. ஸகாத் என்பது கட்டாயக் கடமையான தர்மம். இது தவிர உபரியாக நாமாக செலவிடும் தர்மம் ஸதகா எனப்படும். அதையும் திருக்குர்ஆன் பல இடங்களில் ஆர்வமூட்டுகிறது.

ஜகரிய்யா
இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஈஸா நபியின் தாயாரை எடுத்து வளர்த்தவர் என்பதற்கு குர்ஆனில் சான்றுகள் உள்ளதால் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் எனலாம். இவரை யூதர்கள் கொலை செய்தார்கள் என்று கூறப்படுவதுமுண்டு. யூதர்கள் இவரை விரட்டி வரும்போது ஒரு மரத்திடம் பாதுகாப்புத் தேடியதாகவும், மரம் பிளந்து அவரை உள்ளே மறைத்துக் கொண்டதாகவும், ஆடை மட்டும் வெளியே தெரிந்தததால் மரத்துடன் அவரை இரண்டாக அறுத்துக் கொலை செய்ததாகவும் ஒரு கட்டுக் கதை நிலவுகிறது.

யூதர்கள் பல நபிமார்களைக் கொன்றது உண்மை என்றாலும் அவர்களில் ஜகரிய்யா நபி இருந்தார் என்பதற்கு எந்த ஹதீஸிலும் ஆதாரம் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாமல் இருக்கும் போது இப்படிக் கூறுவது மிகத் தவறாகும். மேலும் அவர் சமுதாயத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தார். தள்ளாத வயதில் தான் குழந்தை பிறந்தது என்பதை வைத்துப் பார்க்கும்போது அவர் கொல்லப்பட்டிருக்க முடியாது எனக் கருதவே அதிக வாய்ப்பு உள்ளது.

ஜக்கூம்
நரகவாசிகளுக்கு உணவாக வழங்கப்படும் மரத்தின் பெயரே ஜக்கூம்.

ஜபூர்
தாவூது நபிக்கு அருளப்பட்ட வேதத்தின் பெயர் ஜபூர் (பார்க்க 4:163, 17:55)

ஸமூத்
ஸாலிஹ் நபியின் சமுதாயத்தின் பெயர் ஸமூத். இவர்கள் மலைகளைக் குடைந்து குகைகள் அமைத்து வாழ்ந்தவர்கள்.

ஸலாம்
சாந்தி, அமைதி, நிம்மதி என்று இச்சொல் பொருள்படும். ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது கூறும் வாழ்த்து இஸ்லாமிய வழக்கில் ஸலாம் எனப்படும்.

ஸஜ்தா - ஸுஜுது
இதன் அகராதிப் பொருள் பணிவு, பணிதல் என்பதாகும். பல இடங்களில் இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் தொழுகையில் உள்ள ஒரு நிலையை இச்சொற்கள் குறிக்கின்றன. அதாவது நெற்றி, மூக்கு, இரண்டு கால் மூட்டுக்கள், இரண்டு உள்ளங்கைகள் ஆகியவை தரையில் படுமாறு இறைவனுக்காக பணிந்து அதில் கூற வேண்டியதைக் கூறுவது தான் ஸஜ்தா எனப்படும். இது தொழுகையின் ஒரு அங்கமாகவும் உள்ளது. தொழுகையில்லாமல் தனியாகவும் செய்யலாம்.

ஸாபியீன்கள்
இறைத்தூதர்கள் அனுப்பப்படாத போதும் அல்லது இறைத்தூதர்கள் வழிகாட்டுநெறி சென்றடையாத போதும் நல்லோர்களாக வாழும் சமுதாயமே ஸாபியீன்கள்! இவ்வுலகுக்கு ஒரே ஒரு கடவுள்தான் இருக்க முடியும். மனிதனால் உருவாக்கப்பட்டவை கடவுளாக இருக்க முடியாது என்பதை இறைத்தூதர் வழியாக இல்லாமல் இறைவன் வழங்கிய அறிவைக் கொண்டே இவர்கள் உணர்ந்து கொள்வார்கள். மேலும் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும் போது எவையெல்லாம் தனி மனிதனுக்கோ, சமுதாயத்திற்கோ கேடு தருமோ அவற்றிலிருந்து விலகி வாழ்வார்கள். நல்லவை எனத் தெரிபவற்றைக் கடைபிடிப்பார்கள்.

வணக்க வழிபாட்டு முறைகளைத் தான் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறைத்தூதர்கள் வழியாகத்தான் அறிய இயலும். இதைத் தவிர மற்ற விஷயங்களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே ஸாபியீன்கள். நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்படும் முன் கற்சிலைகளை வணங்க மறுத்து ஏக இறைவனை மட்டும் நம்பிய சமுதாயத்தினர் இருந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைக் கூறிய போது அவர்களையும் ஸாபியீன்கள் என்று குறிப்பிட்டனர். (பார்க்க புகாரி : 344) யாராவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மார்க்கத்தில் சேர்ந்தால் அவர் ஸாபியீன்களில் சேர்ந்து விட்டார் எனவும் கூறியுள்ளனர். (பார்க்க புகாரி : 3522)
இன்றைக்கும் இறைத்தூதர்களின் போதனைகள் சென்றடையாத சமுதாயம் இருக்கலாம். அவர்கள் ஸாபியீன்களாக வாழ்வதற்கு இறைவன் வழங்கிய அறிவே போதுமானதாகும். இல்லையெனில் மறுமையில் அவர்கள் குற்றவாளிகளே.

ஸாமிரி
இவன் மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்தவன். மூஸா நபியவர்கள் இறைவனின் அழைப்பை ஏற்று தூர் மலைக்குச் சென்ற போது நகைகளை உருக்கி காளைக்கன்றின் சிற்பத்தை உருவாக்கினான். இதுதான் இறைவன் எனக் கூறி மூஸா நபியின் சமுதாயத்தை வழிகெடுத்தான்.

ஸாலிஹ்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். வலிமைமிக்க ஸமூத் எனும் சமுதாயத்தை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார்.

ஸித்ரத்துல் முன்தஹா
ஸித்ரத் என்றால் இலந்தை மரம் என்பது பொருள். ஆறாம் வானத்தில் உள்ள மிகவும் பிரம்மாண்டமான மரத்தின் பெயரே ஸித்ரத்துல் முன்தஹா எனப்படும். இம்மரத்தின் ஒவ்வொரு இலையும் யானையின் காதுபோல் பெரிதாக இருக்கும். இம்மரத்தின் பலவிதமான வர்ணங்கள் கண்ணைப் பறித்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர். புகாரி: 349, 3207, 3342, 3887)

ஸுந்துஸ்
ஸுந்துஸ் என்பது சொர்க்கவாசிகளுக்கு அணிவிக்கப்படும் பட்டாடையின் பெயராகும்.

ஸுலைமான்
ஸுலைமான் அவர்கள் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரது தந்தை தாவூத் (தாவீது) அவர்களும் இறைத்தூதராகவும், மன்னராகவும் திகழ்ந்தார். ஸுலைமான் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆட்சி மற்ற எவருக்கும் வழங்கப்படாத மகத்தான ஆட்சி எனலாம். யூத, கிருத்தவர்கள் இவரை சாலமோன் என்பர்.

ஸூர்
ஸூர் என்பது வாயால் ஊதி ஓசை எழுப்பும் கருவி எனப் பொருள்படும். இறைவன் தன் வசமுள்ள ஸூர் மூலம் ஊதச் செய்வான். ஊதப்பட்டதும் உலகம் அழியும். மறுபடியும் ஊதப்பட்டதும் அழிக்கப்பட்டவர்கள் உயிர்த்தெழுவார்கள். இவ்விரு நிகழ்வுகளைத்தான் ஸூர் ஊதப்படும்போது என்ற சொல் குறிப்பிடுகின்றது

ஜைது
இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் எடுத்து வளர்க்கப்பட்ட வளர்ப்பு மகனாவார். இஸ்லாத்தில் வளர்ப்பு மகன் இல்லை என்ற கட்டளை வருவதற்கு முன் நபிகள் நாயகத்தின் மகன் என்று இவர் குறிப்பிடப்பட்டார். திருக்குர்ஆனில் பெயர் குறிப்பிடப்படும் ஒரே நபித்தோழர் இவர் மட்டுமே.

ஜாலூத்
கொடுங்கோன்மை புரிந்த ஒரு மன்னனின் பெயரே ஜாலூத். இவனைப் போர்க்களத்தில் தாவூத் நபி அவர்கள் கொன்றார்கள்.

ஜிப்ரீல்
ரூஹு என்னும் சொல்லைப் பார்க்கவும்.

ஜின்
‘ஜின்’ என்ற பெயரில் ஒரு படைப்பினம் உள்ளதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. இந்த இனத்தவர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள். கண்களுக்குத் தென்பட மாட்டார்கள் என்ற விஷயத்தில் இந்தப் படைப்பு வானவர்களைப் போன்றது எனலாம். ஆயினும் இந்தப் படைப்பினர் மனிதர்களைப்போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள். மனிதர்களைப் போலவே சொர்க்கம், நரகம் அடைவார்கள்.

ஹஜ்
முஸ்லிம்களில் சக்தி பெற்றவர்கள் வாழ்நாளில் ஒரு தடவை செய்ய வேண்டிய கடமைகளில் ஹஜ் ஒன்றாகும். குறிப்பிட்ட நாட்களில் தான் இதை நிறைவேற்ற வேண்டும். மக்கா சென்று கஅபாவைச் சுற்றுதல், கஅபா வளாகத்தில் தொழுதல், ஸஃபா, மர்வா மலைகளுக்கிடையே ஓடுதல், அரஃபா, முஸ்தலிபா, மினா ஆகிய இடங்களுக்குச் சென்று அங்கே செய்ய வேண்டிய காரியங்களைச் செய்தல் ஹஜ் எனப்படும்.

ஹாமான்
இவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோல் மன்னனுக்கு அமைச்சராக இருந்தான். இவனைப் பற்றி அதிக விபரம் ஏதும் குர்ஆனில் கூறப்படவில்லை.

ஹாரூத், மாரூத்
இவ்விருவரும் நபிகள் நாயகத்திற்கு முந்தைய சமுதாயத்தில் சூனியம் எனும் வித்தையைக் கற்றுக் கொடுத்த தீயவர்களாவர். இவ்விருவரும் வானவர்கள் எனச் சிலர் கூறுகின்றனர். இவர்களது நடவடிக்கைகள் வானவர்களின் பண்புகளுக்கு எதிராக இருப்பதால் இவ்விருவரும் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே சரியான கருத்தாகும்.

ஹாரூன்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரும் மூஸா நபியும் சேர்ந்து இரட்டைத் தூதர்களாக ஃபிர்அவ்ன் கூட்டாத்தாருக்கு அனுப்பப்பட்டனர்.

ஹிஜ்ரத்
ஹிஜ்ரத் என்ற சொல்லுக்கு வெறுத்தல், ஒதுக்குதல், விலகிக் கொள்ளுதல் எனப் பொருள் உண்டு. இஸ்;லாமிய வழக்கில் ஹிஜ்ரத் என்பது குறிப்பிட்ட தியாகத்தைக் குறிக்கும் சொல்லாகும். ஒரு ஊரில், ஒரு நாட்டில் இஸ்லாமிய மார்க்கத்தின் படி வாழ முடியாத நிலை ஏற்பட்டால், கொண்ட கொள்கையைக் காத்துக் கொள்வதற்காக பிறந்த மண், சொத்து சுகம், சுற்றம், நட்பு அனைத்தையும் துறந்து இஸ்லாத்தைக் கடைபிடித்து ஒழுக ஏற்ற இடத்துக்குச் செல்வது தான் ஹிஜ்ரத் எனப்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மக்காவில் முஸ்லிம்கள் இந்த நிலையைச் சந்தித்த போது அபீஸீனியாவுக்குச் சிலர் ஹிஜ்ரத் (தியாகப் பயணம்) மேற்கொண்டனர். வேறு சிலர் மதீனா நகருக்குச் சென்றார். அவர்கள் ஹிஜ்ரத் செய்ததிலிருந்து முஸ்லிம் ஆண்டு ஹிஜ்ரா ஆரம்பமாகிறது. ஹிஜ்ரி முதல் ஆண்டு என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 53ம் வயது என்பது பொருள். 53ம் வயதில்தான் நபிகள் நாயகம் (ஸல்) தியாகப் பயணம் மேற்கொண்டார்கள்.

ஹுது ஹுது
இது ஒரு பறவையின் பெயராகும். ஸுலைமான் நபி காலத்தில் அண்டை நாட்டு ராணியைப் பற்றி உளவறிந்து ஸுலைமான் நபிக்கு இப்பறவை தெரிவித்ததாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

ஹுது
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இறைவன் படைப்புகளிலேயே நிகரற்றவர்களாக கருதப்படும் ஆது சமுதாயத்தை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார்.

ஹூருல் ஈன்
சொர்க்கவாசிகள் வாழ்க்கைத் துணைவியர் ஹூருல் ஈன் எனப்படுவர்.

அல்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு

திருக்குர்ஆனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லை; இறைவன்தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம்.

நபிகள் நாயகத்துக்கு முன் ஏராளமான இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பது தான் இஸ்லாமிய நம்பிக்கை.

முதல் மனிதராகிய ஆதம் முதல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வரை எத்தனை தூதர்கள் வந்துள்ளனர் என்று குர்ஆன் கூறாவிட்டாலும் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறது.

நபிகள் நாயகத்துக்கு முன் அனுப்பப்பட்ட தூதர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குலத்தினருக்கோ, சமுதாயத்தினருக்கோ அனுப்பப்பட்டனர். அவரவர் மொழியில் மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு இறைவன் வழங்கிய செய்தியே வேதம் எனப்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன் இருந்த எல்லா மொழிகளிலும் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 14:4.

இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களில் இறுதியானவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவர்களுக்குப் பின் உலகம் அழியும் காலம் வரை இறைத் தூதர்கள் அனுப்பப்பட மாட்டார்கள். (பார்க்க அல்குர்ஆன் 4:79, 4:170, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3)

மற்ற இறைத் தூதர்கள் போல் குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ, குறிப்பிட்ட மொழியினருக்கோ அன்றி அகில உலகுக்கும் இறைத் தூதராக அனுப்பப்பட்டவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட குர்ஆன் எனும் வேதத்துக்குப் பின் உலகில் வேறு வேதம் ஏதும் அருளப்படாது என்பதால் குர்ஆன் இறுதி வேதம் எனப்படுகிறது.

உலகம் முழுவதற்கும் வழிகாட்ட அருளப்படும் வேதம் அரபு மொழியில் ஏன் அருளப்பட வேண்டும் என்று சிலர் கருதலாம்.

அரபு மொழிதான் தேவமொழி என்பதோ அதுதான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் கொள்கை.

இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டு நெறியைக் கொடுத்து ஒரு வழிகாட்டியை அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும் எந்த மொழியில் அந்த வழிகாட்டு நெறி இருந்நாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்.

யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு இதற்கு ஒரு ஏற்பாடு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.

எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.

நாம் வாழ்கின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும்போது உலக ஒருமைப்பாட்டுக்காகவும் உலக மக்கள் அனைவரும் ஒரே நல்வழியை நோக்கி திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விசயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனிதகுலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.

ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயத்திற்குத் தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேலே அரபு மொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.

குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது எவ்வாறு இறைத் தூதராக நியமிக்கப்பட்டார்கள்? என்பதையும் எவ்வாறு குர்ஆன் அருளப்பட்டது என்பதையும் நாம்தெரிந்து கொள்வது அதிகம் பயனளிக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இயற்பெயர் முஹம்மத். இவர்கள் இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா எனும் நகரத்தில் கி.பி. 570ம் ஆண்டு பிறந்தார்கள்.

தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையை இழந்து, சிறு வயதிலேயே தாயையும் இழந்தார்கள். பெற்றோரை இழந்த பின் அவர்களின் தந்தை வழி பாட்டனார் அப்துல் முத்தலிப் என்பார் தமது பொறுப்பில் அவர்களை எடுத்து வளர்த்து வந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபுடைய பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்தார்கள்.

சிறுவராக இருந்த போது ஆடு மேய்த்திருக்கிறார்கள். ஓரளவு விபரம் தெரியவந்த பிறகு தமது பெரிய தந்தையோடு சேர்ந்து வியாபாரமும் செய்திருக்கிறார்கள்.
இந்த வியாபாரத்தின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வெளியூர் பயணங்களை மேற்கொண்டார்கள்.

25-வது வயதில் தம்மை விட மூத்தவரான கதீஜா என்ற விதவையை மணந்தார்கள். அவரும் அன்றைய சமுதாயத்தில் பெரிய வசதி படைத்தவராக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 25ம் வயதிலேயே மிகவும் வசதி படைத்தவராக மாறினார்கள்.

குர்ஆன் அருளப்பட்ட காலகட்டம்
 
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் பல கடவுள் நம்பிக்கையுடையோராக இருந்தார்கள். ஏராளமான மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர்!
  • கடவுளை நிர்வணமாக வழிபட்டனர்!
  • பெண் குழந்தைகள் பிறப்பதைக் கேவலமாகக் கருதியதுடன் பெண் குழந்தை பிறந்தால் அதை உயிருடன் புதைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்!
  • குடம் குடமாக மது பானங்கள் அருந்தினார்கள்!
  • காமக் களியாட்டத்தில் மூழ்கித் திளைத்தனர்!
  • பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதினார்கள்!
  • தந்தை இறந்துவிட்டால் தந்தையின் மனைவியை மகன் பயன்படுத்திக் கொள்வது சர்வ சாதராணமாக இருந்தது!
  • சாதி வேற்றுமையும் தலை விரித்தாடியது!
  • நபிகள் நாயகம் எந்தக் குலத்தில் பிறந்தார்களோ அந்தக் குலம் - குறைஷிக் குலம் - மிகவும் உயர்ந்த குலம் எனவும் மற்றவர்கள் அற்பமானவர்கள் எனவும் விதி செய்திருந்தனர்!
  • அரபு மொழிதான் ஒரே மொழி என்றும், மற்ற மொழி பேசுவோர் அஜமிகள்(கால்நடைகள்) என்று கூறும் அளவுக்கு அவர்களிடம் அரபு மொழி வெறி மிகைத்திருந்தது.
  • மனித உயிர்களைக் கொன்று குவிப்பது மிகச் சிறிய குற்றமாகக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை. அற்பமான சண்டைகளுக்காகக் கூட கொலை செய்வார்கள்.!
  • தமது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் கொலையாளியைப் பழி வாங்காது விட மாட்டார்கள். அவரைத் தம்மால் பழிவாங்க முடியாவிட்டால் தமது வாரிசுகளுக்கு வலியுறுத்திச் செய்வார்கள். பத்து தலைமுறைக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவனைக் கொன்று கணக்குத் தீர்ப்பார்கள்.
இத்தகைய நிலையைக் கண்டு மனம் வெறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தின் நடவடிக்கைகள் சரியானவை அல்ல என்று திட்டவட்டமாக உணர்ந்தார்கள்.

எனவே தமது நாற்பதாம் வயதில் மக்காவிற்கு வெளியே உள்ள ‘ஹிரா’ எனும் குகைக்குச் சென்று தனிமையில் சிந்திப்பதை வழக்கமாகக் கொள்ளலானார்கள்.

பல நாட்களுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டு குகையிலேயே தங்கி விடுவார்கள். உணவு முடிந்ததும் வீட்டுக்கு வந்து உணவு தயாரித்துக் கொண்டு மறுபடியும் குகைக்குச் சென்று விடுவார்கள்.

இவ்வாறு குகையில் இருந்த போது தான் வானத்தையும், பூமியையும் தொட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான தோற்றத்தில் ஒருவர் நிற்பதைக் காண்டார்கள்.

அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து ‘ஓது’ எனக் கூறிய போது தமக்கு ஓதத் தெரியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மீண்டும் அவர் ‘ஓது’ எனக் கூற அப்போதும் தெரியாது என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து “படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக” என்று தொடங்கும் சில வார்த்தைகளைக் கூறினார். (இது 96வது அத்தியாயத்தில் முதல் ஐந்து வசனங்களாக இடம் பெற்றுள்ளது. பார்க்க அல்குர்ஆன் 96:1-5)

இப்படித் தான் நபிகள் நாயகம் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு முதல் செய்தியும் அருளப்பட்டது. ஆனாலும் நபிகள் நாயகம் அவர்கள் அதிர்ச்சியடைந்து அச்சம் கொண்டார்கள். தமது மனைவியிடம் வந்து இதைக் கூறினார்கள்.

“இறைவன் உங்களைக் கைவிட மாட்டான்; மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்; ஏழைகளுக்கு வாரி வழங்குகிறீர்கள்; உறவினர்களை உபசரிக்கிறீர்கள்; எனவே அல்லாஹ் உங்களைக் கைவிட மாட்டான்” என்றெல்லாம் அவர்களின் மனைவி கதீஜா அவர்கள் ஆறுதல் படுத்தினார்கள்.

ஆயினும் தமது ஆறுதல் போதிய பயனளிக்காததைக் கண்டு தமது உறவினர் வரகாவிடம் நபிகள் நாயகத்தை அழைத்துச் சென்றார்கள். இவர் முந்தைய வேதங்களைக் கற்றறிந்து, கிறித்தவ மார்க்கத்தையும் தழுவியிருந்தார்.

“நீர் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளீர்” உம்மை உமது சமுதாயத்தினர் ஊரை விட்டே வெளியேற்றும் நிலையை அடைவீர்; ஏனெனில் இறைத் தூதர்கள் பிரச்சாரம் செய்யும் போது இது தான் நடந்துள்ளது என்றெல்லாம் அவர் கூறி நம்பிக்கையூட்டினார். (நூல்: புகாரி-2)

இப்படி ஆரம்பித்த இறைச் செய்தியின் வருகை சிறிது சிறிதாக சந்தர்ப்பத்துக்கு ஏற்ப 23 ஆண்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்ட இறைச் செய்தியின் தொகுப்பே திருக்குர்ஆன்.

குர்ஆனின் அத்தாட்சிகள்

Sunday 22 May 2011
ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாதையில் கொண்டுசெல்ல அல்லாஹ்விடம் இருந்து வேதங்கள் திருதூதர்கள் வழியாக அளிக்கப்பட்டு கொண்டு இருந்தன. ஏழாவது நூற்றான்டில் வேதங்களின் இறுதியாக இறுதி நாள் வரை உள்ள மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட வேதம்தான் திருக்குர்ஆன் ஆகும்.

அறிவியல் முன்னேற்றத்தால் மனிதனின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும், திருக்குர்ஆனின் எந்தவொரு கருத்தும் தவறானது என்று இதுவரை எவராலும் நிருபிக்க முடியவில்லை.

அதைப்போல் குர்ஆனில் கூறப்பட்ட வரலாற்று செய்திகள் நூறு சதவீதம் உண்மையானது என்பதை இப்பூமியில் பயணம் சென்றால் நம்மால் உணர முடியும். பூமியில் பயணம் செய்து கடந்த கால வரலாற்றை படித்து படிப்பினை பெற திருக்குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது.

பூமியில் பிராயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 27:69

ஆதம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் முதல் முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸலாம் வரை உள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் இங்கு தொகுக்கப் பட்டுள்ளன.
திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையையும் முன்மாதிரியாக வைத்து உங்கள் வாழ்கையை சரிசெய்து கொள்ளுங்கள். அதுமட்டும்தான் இவ்வுலகத்தில் சாந்தியையும் சமாதானத்தையும் மறுமையில் சொர்கத்தையும் அடைவதற்க்கான ஓரே வழி.

முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

ஆசிரியர் : ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி
தமிழாக்கம் : முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி


பதிப்புரை
ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்பு
ஆசிரியர் முன்னுரை
பொருளடக்கம்
அரபியர்கள் நிரபரப்பு மற்றும் வமிசம், அட்சி மற்றும் பொருளாதாரம், சமயம் மற்றும் சமூகம்

அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் அரபிய சமுதாயங்களும்

--அரபியர்கள் வாழ்ந்த இடங்கள்

-- அரபிய சமுதாயங்கள்

அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்

-- யமன் நாடு (ஏமன்)

-- ஹீரா நாடு

-- ஷாம் நாடு (ஸிரியா)

-- ஹிஜாஸ் பகுதியில் அதிகாரம்

-- ஏனைய அரபியர்களின் ஆட்சி அதிகாரம்

-- அரசியல் பின்னணி

அரபியர்களின் சமய நெறிகள்

-- சமயங்களின் நிலைமைகள்

அறியாமைக் கால அரபியச் சமுதாயம்

-- சமுதாய அமைப்பு

-- பொருளாதாரம்

-- பண்பாடுகள்

வமிசம், பிறப்பு, வளர்ப்பு

நபியவர்களின் வமிசமும் குடும்பமும்

-- நபியவர்களின் வமிசம்

-- நபியவர்களின் குடும்பம்

பிறப்பு மற்றும் நபித்துவத்துக்கு முந்திய நாற்பது ஆண்டுகள்

-- பிறப்பு

-- ஸஅது கிளையாரிடம்

-- நெஞ்சு திறக்கப்படுதல்

-- பாசமிகு தாயாரிடம்

-- பரிவுமிக்க பாட்டனாரிடம்

-- பிரியமான பெரியதந்தையிடம்

-- கதீஜாவை மணம் புரிதல்

-- கஅபாவை செப்பனிடுதல், நபி (ஸல்) அவர்கள் நடுவராகுதல்

-- நபித்துவத்திற்கு முன் - ஒரு பார்வை

இறைத்தூதராகுதல் மற்றும் அழைப்புப் பணி

மக்கா வாழ்க்கை

நபித்துவ நிழலில்

-- ஹிரா குகையில்

-- ஜிப்ரீல் வருகை

-- இறைச் செய்தி தாமதம்!

-- மீண்டும் ஜிப்ரீல்

-- வஹியின் வகைகள்

முதல் கால கட்டம்

அல்லாஹ்வின் பக்கம் அழைத்தல்

-- இரகசிய அழைப்பு - மூன்று ஆண்டுகள்

-- முந்தியவர்கள்!

-- தொழுகை

இரண்டாம் கால கட்டம்

-- பகிரங்க அழைப்பு

-- நெருங்கிய உறவினர்களை நேர்வழிக்கு அழைத்தல்

-- ஸஃபா மலை மீது...

-- ஹாஜிகளைத் தடுத்தல்

-- அழைப்புப் பணியில் இடையுறுகள்

-- துன்புறுத்துதல்

-- குறைஷிகளும் நபியவர்களும்...

-- குறைஷியர் குழுவும் அபூதாலிபும்

-- அபூதாலிபை மிரட்டுதல்

-- மீண்டும் குறைஷியர்கள்...

-- நபியவர்கள் மீது அத்துமீறல்

-- அர்கமின் இல்லத்தில் அழைப்புப் பணி

-- ஹபஷாவில் அடைக்கலம்

-- இணைவைப்பவர்களும் சிரம் பணிந்தனர்

-- முஹாஜிர்கள் திரும்புதல்

-- இரண்டாவது ஹிஜ்ரா

-- குறைஷியர்களின் சூழ்ச்சி

-- நபியவர்கள் மீது கொலை முயற்சி

-- ஹம்ஜா இஸ்லாமை தழுவதல்

-- உமர் இஸ்லாமைத் தழுவுதல்

-- நபியவர்களுக்கு முன் உத்பா

-- பேரம் பேசும் தலைவர்கள்!

-- அபூஜஹ்லின் கொலை முயற்சி

-- சமரச முயற்சி

-- மறு ஆலொசனை

-- அபூதாலிபின் முன்னெச்சரிக்கை

முழுமையாக ஒதுக்கி வைத்தல்

-- தீய தீர்மானம்

-- “கணவாய் அபூதாலிபில்“ மூன்று ஆண்டுகள்

-- கிழிக்கப்பட்டது தீர்மானம்!

-- குறைஷிகளின் கடைசிக் குழு

துயர ஆண்டு

-- அபூதாலிப் மரணம்

-- துணைவி கதீஜா மரணம்

-- அடுக்கடுக்கான துயரங்கள்

-- ஸவ்தா உடன் மறுமணம்

பொறுமை மற்றும் நிலைகுலையாமையின் தூண்டுகோல்கள்

மூன்றாம் கால கட்டம்

மக்காவிற்கு வெளியே இஸ்லாமிய அழைப்பு

-- தாயிஃப் நகரில்

கோத்திரங்களுக்கும் தனி நபர்களுக்கும்

-- இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட கோத்திரத்தினர்

-- ஆறு மேன்மக்கள்

-- ஆயிஷாவை மணமுடித்தல்

மிஃராஜ்

அகபாவில் முதல் ஒப்பந்தம்

-- மதீனாவில் அழைப்பாளர்

-- மகிழ்ச்சி தரும் வெற்றி

அகபாவில் இரண்டாவது ஒப்பந்தம்

-- உரையாடலின் தொடக்கமும் அப்பாஸின் விளக்கமும்

-- ஒப்பந்தத்தின் அம்சங்கள்

-- ஒப்பந்தத்தின் பின்விளைவை உணர்த்துதல்

-- 12 தலைவர்கள்

-- ஷைத்தான் கூச்சலிடுகிறான்

-- குறைஷிகளின் எதிர்ப்பு

-- குறைஷிகள் செய்தியை உறுதி செய்தனர்

ஹிஜ்ராவின் தொடக்கங்கள்

தாருந் நத்வா

-- நபியவர்களைக் கொல்ல திட்டமிடுதல்

நபியவர்கள் ஹிஜ்ரா செல்லுதல்

-- குறைஷிகளின் திட்டமும், அல்லாஹ்வின் ஏற்பாடும்

-- சுற்றி வளைத்தல்

-- நபியவர்கள் புறப்படுகிறார்கள்

-- வீட்டிலிருந்து குகை வரை

-- இருவரும் குகைக்குள்

-- மதீனாவின் வழியினிலே

-- “குபா”வில்

-- மதீனாவில்

மதீனா வாழ்க்கை - அழைப்பு, போர், வெற்றி

மதீனா வாழ்க்கையில் அழைப்பு மற்றும் போரின் கட்டங்கள்

ஹிஜ்ரா சமயத்தில் மதீனாவில் வசித்தவர்களும்

முதல் கட்டம் - புதிய சமூகம் அமைத்தல்

-- அல்மஸ்ஜித் அந்நபவி

-- சகோதரத்துவ ஒப்பந்தம்

-- இஸ்லாமிய நட்பு ஒப்பந்தம்

-- நட்பு ஒப்பந்தத்தின் அம்சங்கள்

-- ஆன்மீகப் புரட்சிகள்

யூதர்களுடன் ஒப்பந்தம்

ஆயுதமேந்தித் தாக்குதல்

-- குறைஷியர்களின் அச்சுறுத்துதலும்

-- அபூஜஹ்லின் அச்சுறுத்தல்

-- குறைஷிகளின் மிரட்டல்

-- போர் புரிய அனுமதி

-- இக்காலத்தில் நபியவர்கள் நிகழ்த்திய போர்களும்

பெரிய பத்ர் போர்

-- போருக்குரிய காரணம்

-- இஸ்லாமியப் படையும் அதற்கு தளபதிகள் நியமிக்கப்படுவதும்

-- இஸ்லாமியப் படை பத்ரை நோக்கி

-- மக்காவில் எச்சரிப்பவர்

-- மக்காவாசிகள் போருக்குத் தயார்

-- மக்கா நகர படையின் அளவு

-- பக்ர் கிளையினரை அஞ்சுதல்

-- மக்காவின் படை புறப்படுகிறது

-- வியாபாரக் கூட்டம் தப்பித்தது

-- திரும்பிட நினைத்த மக்கா படையில் பிளவு

-- இக்கட்டான நிலையில் இஸ்லாமிய ராணுவம்

-- ஆலோசனை சபை

-- இஸ்லாமியப் படை பயணத்தைத் தொடர்கிறது

-- கண்காணிக்கும் பணியில் நபியவர்கள்

-- மக்கா படையின் முக்கிய விஷயங்களை அறிதல்

-- மழை பொழிதல்

-- முக்கிய ராணுவத் தளத்தை நோக்கி இஸ்லாமியப் படை

-- படையை வழி நடத்துவதற்கான இடம்

-- படையை ஒழுங்குபடுத்துதல் - இரவைக் கழித்தல்

-- போர்க்களத்தில் மக்கா படையில் பிளவு ஏற்படுதல்

-- இரு படைகளும் நேருக்கு நேர்

-- நேரம் நெருங்கியது - சண்டையின் முதல் தீ

-- ஒண்டிக்கு ஒண்டி

-- எதிரிகளின் பாய்ச்சல்

-- நபியவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடுகிறார்கள்

-- வானவர்கள் வருகிறார்கள்

-- எதிர் பாய்ச்சல்

-- நழுவுகிறான் இப்லீஸ்

-- பெரும் தோல்வி

-- அபூஜஹ்லின் வீம்பு

-- கொல்லப்பட்டான் அபூஜஹ்ல்

-- இறைநம்பிக்கை நிகழ்த்திய அதிசயங்கள்

-- இருதரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

-- தோல்வியை மக்கா அறிகிறது

-- வெற்றியை மதீனா அறிகிறது

-- இஸ்லாமியப் படை மதீனா புறப்படுகிறது

-- வாழ்த்த வந்தவர்கள்

-- கைதிகளின் விவகாரம்

-- இப்போர் குறித்து குர்ஆன்

பத்ர் மற்றும் உஹுத் போர்களுக்கு மத்தியில்

-- ஸுலைம் குலத்தவருடன் போர்

-- நபியவர்களைக் கொல்ல திட்டம்

-- கைனுகா கிளையினருடன் போர்

-- யூதர்களின் சூழ்ச்சிக்கு உதாரணம்

-- கைனுகாவினர் ஒப்பந்தத்தை முறிக்கின்றனர்

-- முற்றுகையிடுதல் - சரணடைதல் - நாடுகடத்தல்

-- ஸவீக் போர்

-- தீ அம்ர் போர்

-- கயவன் கஅபை கொல்லுதல்

-- பஹ்ரான் போர்

-- ஜைதுப்னு ஹாஸா படைப் பிரிவு

உஹுத் போர்

-- குறைஷிகள் பழிவாங்கத் தயாராகுதல்

-- குறைஷிப் படையும் அதன் தளபதிகளும்

-- மக்காவின் படை புறப்படுகிறது

-- முஸ்லிம்கள் எதிரிகளை உளவு பார்த்தல்

-- அவசர நிலை

-- எதிரிகள் மதீனா எல்லையில்

-- தற்காப்புத் திட்டத்தை ஆலோசித்தல்

-- படையை திரட்டுதல் - போர்க்களம் புறப்படுதல்

-- படையைப் பார்வையிடுதல்

-- உஹுதுக்கும் மதீனாவுக்குமிடையில்

-- முரண்டுபிடிக்கிறான் இப்னு உபை

-- மீதமுள்ள இஸ்லாமியப் படை உஹுதை நோக்கி

-- தற்காப்புத் திட்டம்

-- நபியவர்கள் படையினருக்கு வீரமூட்டுகிறார்கள்

-- மக்கா படையின் அமைப்பு

-- குறைஷிகள் நடத்திய அரசியல் பேரங்கள்

-- குறைஷிப் பெண்கள் வெறியூட்டுகின்றனர்

-- போரின் முதல் தீ பிழம்பு

-- கொடியை சுற்றிக் கடும் போர்

-- மற்ற பகுதிகளில் சண்டை

-- அல்லாஹ்வின் சிங்கம் வீர மரணம்

-- நிலைமையைக் கட்டுப்படுத்துவது

-- மனைவியைப் பிரிந்து போர்க்களம் நோக்கி

-- போரில் அம்பெறியும் வீரர்களின் பங்கு

-- இணைவைப்பவர்களுக்குத் தோல்வி

-- அம்பெறி வீரர்களின் மாபெரும் தவறு

-- காலித் முஸ்லிம்களைச் சுற்றி வளைக்கிறார்

-- நபியவர்களின் நிலை

-- முஸ்லிம்கள் சிதறுதல்

-- நபியவர்களைச் சுற்றி கடும் சண்டை

-- நபியவர்களின் வாழ்க்கையில் மிக இக்கட்டான நேரம்

-- நபியவர்கள் அருகே தோழர்கள் திரளுதல்

-- எதிரிகளின் தாக்குதல் வேகமாகுதல்

-- செயற்கரிய வீரதீரச் செயல்கள்

-- நபியவர்கள் கொல்லப்பட்ட வதந்தி - அதன் விளைவு!

-- நபியவர்கள் போரை தொடர்கிறார்கள்

-- சண்டாளன் உபை கொல்லப்படுதல்

-- நபியவர்களுக்கு தல்ஹா தோள் கொடுக்கிறார்

-- இணைவைப்பவர்களின் இறுதித் தாக்குதல்

-- போரில் உயிர் நீத்த தியாகிகளைச் சிதைத்தல்

-- இறுதி வரை சண்டையிட முஸ்லிம்கள் துணிதல்

-- மலைக் கணவாயில்

-- அபூ ஸுஃப்யானின் மகிழ்ச்சி

-- பத்ரில் சந்திக்க அழைத்தல்

-- எதிரிகளின் நிலை அறிதல்

-- தியாகிகளை கண்டெடுத்தல்

-- தியாகிகளின் உடல்களை நல்லடக்கம் செய்தல்

-- நபியவர்களின் பிரார்த்தனை

-- மதீனா திரும்புதல் அன்பு மற்றும் தியாகத்தின் அற்புதங்கள்

-- இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

-- மதீனாவில் அவசர நிலை

-- ஹம்ராவுல் அஸத் போர்

-- இப்போர் குறித்து குர்ஆன் பேசுகிறது

-- இப்போரின் அழகிய முடிவுகளும் நுட்பங்களும்

உஹுத் போருக்குப் பின் அனுப்பப்பட்ட படை

-- அபூ ஸலமா படைப் பிரிவு

-- அப்துல்லாஹ் இப்னு உனைஸை அனுப்புதல்

-- ரஜீஃ குழு

-- பிஃரு மஊனா

-- நழீர் இனத்தவருடன் போர்

-- நஜ்து போர்

-- இரண்டாம் பத்ர் போர்

-- தூமத்துல் ஜன்தல் போர்

அல்அஹ்ஜாப் போர்

பனூ குரைளா போர்

அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை

-- ஸல்லாம் இப்னு அபுல்ஹுகைக்

-- முஹம்மது இப்னு மஸ்லமா படைப் பிரிவு

-- லஹ்யான் போர்

-- குழுக்களையும் படைப்பிரிவுகளையும் தொடர்ந்து அனுப்புதல்

பனூ முஸ்தலக் (அ) அல்முரைஸீ போர்

-- நயவஞ்சகர்களின் நடவடிக்கைகள்

-- முஸ்தலக் போரில் நயவஞ்சகர்கள்

-- 1) நயவஞ்சகர்களின் கூற்று

-- 2) அவதூறு சம்பவம்

குழுக்களும் படைப்பிரிவுகளும்

ஹுதைபிய்யா

-- உம்ரா

-- முஸ்லிம்களே புறப்படுங்கள்!

-- மக்காவை நோக்கி

-- தடுக்க முயற்சித்தல்

-- மாற்று நடவடிக்கை

-- நடுவர் வருகிறார்

-- குறைஷிகளின் தூதர்கள்

-- அல்லாஹ்வின் ஏற்பாடு

-- குறைஷிகளை சந்திக்க முஸ்லிம் தூதர்

-- கொலை செய்தி பரவுதல், உடன்படிக்கை வாங்குதல்

-- சமாதான ஒப்பந்தம்

-- அபூஜந்தல் மீது கொடுமை

-- உம்ராவை முடித்துக் கொள்வது

-- பெண்களைத் திரும்ப அனுப்ப மறுத்தல்

-- ஒப்பந்த அம்சங்களின் விளைவுகள்

-- முஸ்லிம்களின் துக்கமும், உமரின் தர்க்கமும்

-- ஒடுக்கப்பட்டோர் துயர் தீர்ந்தது

-- குறைஷி மாவீரர்கள் இஸ்லாமைத் தழுவுதல்

இரண்டாவது கட்டம் - புதிய சகாப்தம்

அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதுதல்

-- 1) ஹபஷா மன்னர் நஜ்ஜாஷிக்குக் கடிதம்

-- 2) மிஸ்ரு நாட்டு மன்னருக்குக் கடிதம்

-- 3) பாரசீக மன்னருக்குக் கடிதம்

-- 4) ரோம் நாட்டு மன்னருக்குக் கடிதம்

-- 5) பஹ்ரைன் நாட்டு ஆளுநருக்குக் கடிதம்

-- 6) யமாமா நாட்டு அரசருக்குக் கடிதம்

-- 7) ஸிரியா நாட்டு மன்னருக்குக் கடிதம்

-- 8) ஓமன் நாட்டு அரசருக்குக் கடிதம்

ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் நிகழ்ந்த

-- தூகரத் (அ) காபா போர்

கைபர் போர்

-- போருக்கான காரணம்

-- கைபரை நோக்கி

-- இஸ்லாமியப் படையின் எண்ணிக்கை

-- நயவஞ்சகர்கள் யூதர்களுடன் தொடர்பு கொள்ளுதல்

-- கைபரின் வழியில்

-- வழியில் நடந்த சில நிகழ்ச்சிகள்

-- கைபரின் எல்லையில் இஸ்லாமியப் படை

-- கைபரின் கோட்டைகள்

-- இஸ்லாமியப் படை முகாமிடுதல்

-- போருக்குத் தயாராகுதல், வெற்றிக்கான நற்செய்தி கூறுதல்

-- போர் தொடங்குதல், நாயிம் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- ஸஅப் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- ஜுபைர் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- உபை கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- நஜார் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- இரண்டாவது பகுதியை வெற்றி கொள்ளுதல்

-- பேச்சுவார்த்தை

-- அபூ ஹுகைகின் மகன்களைக் கொல்லுதல்

-- கனீமத்தை பங்கு வைக்கப்படுதல்

-- ஜஅஃபர் மற்றும் அஷ்அரி கிளையினர் வருகை

-- ஸஃபிய்யாவுடன் திருமணம்

-- நஞ்சு கலந்த உணவு

-- கைபர் போரில் இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

-- ஃபதக்

-- வாதில் குரா

-- தைமா

-- மதீனாவிற்குத் திரும்புதல்

-- அபான் இப்னு ஸஈத் படைப்பிரிவு

அடுத்தக்கட்ட போர்களும் படைப் பிரிவுகளும்

-- தாதுர் ரிகா

உம்ராவை நிறைவேற்றப் புறப்படுதல்

முஃதா யுத்தம்

-- யுத்தத்திற்கான காரணம்

-- படைத் தளபதிகள்

-- நபியவர்களின் அறிவுரை

-- படையை வழியனுப்புதல்

-- இஸ்லாமியப் படை புறப்படுதலும்

-- ஆலோசனை சபை

-- எதிரியைக் களம் காண

-- யுத்தத்தின் ஆரம்பம்

-- அல்லாஹ்வின் வாள் கொடியை ஏந்தியது

-- சண்டை ஓய்கிறது

-- இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

-- யுத்தத்தின் தாக்கம்

-- தாதுஸ்ஸலாசில் படைப் பிரிவு

-- அபூகதாதா படைப் பிரிவு

மக்காவை வெற்றி கொள்வது

-- உடன்படிக்கையை மீறுதல்

-- அபூ ஸுஃப்யான் ஓடி வருகிறார்

-- மறைமுகமாகப் போருக்கு ஆயத்தம்

-- மக்காவை நோக்கி இஸ்லாமியப் படை

-- மர்ருள் ளஹ்ரானில் இஸ்லாமியப் படை

-- நபியவர்களுக்கு முன் அபூஸுஃப்யான்

-- மக்கா நோக்கி இஸ்லாமியப் படை

-- குறைஷிகளின் அதிர்ச்சி

-- இஸ்லாமியப் படை “தூதுவா“வை அடைகிறது

-- இஸ்லாமியப் படை மக்காவுக்குள் நுழைகிறது

-- நபியவர்கள் சங்கைமிகு பள்ளிக்குள் நுழைகிறார்கள்

-- நபியவர்கள் கஅபாவில் தொழுகிறார்கள்

-- உங்களை எவ்விதத்திலும் பழிக்கப்படாது

-- கஅபாவின் சாவியை உரியவரிடம் வழங்குதல்

-- கஅபாவின் மேல் பிலால் அதான் கூறுகிறார்

-- “ஸலாத்துல் ஃபத்ஹ்“ அல்லது “ஸலாத்துஷ் ஷுக்ர்“

-- பெருங்குற்றவாளிகளைக் கொல்ல கட்டளையிடுதல்

-- ஸஃப்வான் இப்னு உமய்யா

-- நபியவர்களின் சொற்பொழிவு

-- நபியவர்களைப் பற்றி அன்சாரிகள் அஞ்சுதல்

-- பைஆ வாங்குதல்

-- மக்காவில் நபியவர்களின் செயல்பாடுகள்

-- படைப் பிரிவுகளும் குழுக்களும்

மூன்றாம் கட்டம்

ஹுனைன் யுத்தம்

-- அவ்தாஸில் எதிரிகள்

-- போர்த் தளபதியின் முடிவுக்கு போர்க்கள நிபுணர் எதிர்ப்பு

-- நபியவர்களின் உளவாளி

-- மக்காவிலிருந்து ஹுனைனை நோக்கி

-- முஸ்லிம்கள் திடீரெனத் தாக்கப்படுதல்

-- முஸ்லிம்கள் களம் திரும்புதல், போர் உக்கிரமாகுதல்

-- எதிரிகள் தோல்வி அடைகின்றனர்

-- எதிரிகளை விரட்டுதல்

-- கனீமா பொருட்கள்

-- தாயிஃப் போர்

-- ஜிஃரானாவில் கனீமாவைப் பங்கு வைத்தல்

-- நபியவர்கள் மீது அன்சாரிகளின் வருத்தம்

-- ஹவாஜின் குழுவினன் வருகை

-- உம்ராவை நிறைவேற்றி மதீனா திரும்புதல்

மக்கா வெற்றிக்குப் பின்

-- ஜகாத் வசூலிக்க அனுப்பப்பட்டவர்கள்

-- படைப் பிரிவுகள்

தபூக் போர்

-- போருக்கான காரணம்

-- ரோமர்களும், கஸ்ஸானியர்களும் போருக்கு வருகின்றனர்

-- நிலைமை மேலும் மோசமாகுதல்

-- நபியவர்களின் எதிர் நடவடிக்கை!

-- ரோமர்களிடம் போர் புரிய தயாராகும்படி அறிவிப்பு

-- முஸ்லிம்கள் போட்டி போட்டுக்கொண்டு

-- தபூக்கை நோக்கி இஸ்லாமியப் படை

-- தபூக்கில் இஸ்லாமியப் படை

-- மதீனாவிற்குத் திரும்புதல்

-- பின்தங்கியவர்கள்

-- போரின் தாக்கங்கள்

-- இப்போர் குறித்து குர்ஆன்

இந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்

அபூபக்ர் ஹஜ்ஜுக்கு புறப்படுதல்

போர்கள் - ஒரு கண்ணோட்டம்

மக்கள் அலை அலையாய் அல்லாஹ்வின் மார்க்கத்தை தழுவுகிறார்கள்

-- குழுக்கள்

அழைப்புப் பணியின் வெற்றிகளும் அதன் தாக்கங்களும்

ஹஜ்ஜத்துல் விதா

-- ஹஜ்ஜத்துல் விதா உரை

இறுதிப் படை

உயர்ந்தோனை நோக்கி

-- புறப்படுவதற்கான அறிகுறிகள்

-- நோயின் ஆரம்பம்

-- இறுதி வாரம்

-- மரணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பு

-- நான்கு நாட்களுக்கு முன்பு

-- மூன்று நாட்களுக்கு முன்பு

-- இரண்டு அல்லது ஒரு நாளுக்கு முன்பு

-- ஒரு நாள் முன்பு

-- வாழ்வின் இறுதி நாள்

-- மரணத் தருவாயில்

-- கவலையில் நபித்தோழர்கள்

-- உமரின் நிலை

-- அபூபக்ரின் நிலை

-- அடக்கம் செய்ய ஏற்பாடுகள்

-- அடக்கம் செய்வது

நபியவர்களின் குடும்பம்

-- பலதார மணம் புரிந்தது ஏன்?

பண்புகளும் நற்குணங்களும்

-- பேரழகு உடையவர்

-- உயர் பண்பாளர்

கலைச் சொல் அகராதி